தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார்
கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து
மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி, துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து
இந்து முன்னணி, விஷ்வ
ஹிந்து பரிஷத், விநாயகர்
சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகளை கைது செய்யவேண்டும்
என பிரசுரம்
வெளியிட்டனர்.
மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர் ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஆண்களும் பெண்களும், ஏராளமானோர் அங்கு வந்து குவியத் தொடங்கினர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யூசுப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர் ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஆண்களும் பெண்களும், ஏராளமானோர் அங்கு வந்து குவியத் தொடங்கினர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யூசுப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"டிசம்பர் 21-ந் தேதி உலகம் அழிந்துவிடும் என்று ஏற்பட்ட
வதந்தியால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்தனர். இதற்காக மக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜாம்பஜார் கிளை
நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இதுகுறித்து இந்து
அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு
செய்துள்ளனர். அதில், யாகூப் என்பவரை
கைது செய்துள்ளனர்.
ஆனால் இந்த துண்டு பிரசுரத்துக்கு தொடர்பே இல்லாத மைலாப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் நடு இரவில் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமரன் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளார்.
பிற மதத்தை புண்படுத்தும் விதமாக செயல்பட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தியுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் இந்த துண்டு பிரசுரத்துக்கு தொடர்பே இல்லாத மைலாப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் நடு இரவில் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமரன் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளார்.
பிற மதத்தை புண்படுத்தும் விதமாக செயல்பட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தியுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.