தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் 02-01-2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் தலைமை வகித்தார். இதில் மௌலவி சலீம் அவர்கள் கல்வி என்ற தலைப்பிலும், மௌலவி தாவூத் கைசர் அவர்கள்” ஏகத்துவவாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும்,  அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 30 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளையின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.