தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்

இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

அமைச்சரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த சச்சார் கமிட்டி செயலாளர் உறுப்பினராகயிருந்த பிரபல பொருளாதார வல்லுநர் அபூ ஸாலிஹ் ஷெரீஃப் சல்மான் குர்ஷிதிற்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏராளமான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என அபூ ஸாலிஹ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சச்சார் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி முஸ்லிம்கள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி உள்பட மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிபுரிந்த அரசுகளாகும் என அபூ ஸாலிஹ் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டில் கூட பாரபட்சத்தை காண்பித்த இந்த அரசுகள் முஸ்லிம்களை ஒதுக்கி தள்ளினர். பல்வேறு துறைகளில் 60 வருடங்களாக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமைக்கு என்ன செய்தார்கள் என்பதை அரசுகள் விளக்க வேண்டும்.

அரசின் உண்மை முகம் இழிவுக்கு ஆளாகுமானால் பாரபட்சம் என்ற வார்த்தையை வேண்டுமானால் நீக்கலாம் என அபூஸாலிஹ் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதை தெளிவுப்படுத்துவது தான் தனது புதிய ஆய்வு என அபூ ஸாலிஹ் கூறுகிறார். அரசு கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசு தொழில் நிறுவனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐ.மு அரசு என்ன செய்தது? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

சச்சார் கமிட்டி அறிக்கையை பழித்தூற்றும் சல்மான் குர்ஷித் ஏன் அதனை ஏற்றுக்கொண்டார்? என அபூஸாலிஹ் கேள்வி எழுப்புகிறார். இச்சர்ச்சையை குறித்து பதிலளித்த சல்மான் குர்ஷி, ‘முஸ்லிம்களை மட்டும் சிறுபான்மையினராக பார்ப்பதும், மற்றவர்களை காணாதிருப்பதையும் எதிர்ப்பவன் நான். முஸ்லிம்களுக்கு விமர்சிக்க முடியாத ஒன்று குர்ஆன் மட்டுமே. அதனால் தான் நான் இவ்வாறு கூறினேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

சல்மான் குர்ஷித்தின் கருத்துக்களைக் குறித்து பதிலளித்த நீதிபதி ராஜேந்திர சச்சார் ஜூடிஸியல் தொடர்பான விஷயம் என்பதால் இதுக்குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சல்மார் குர்ஷித்தின் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்கு பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பர்தா குறித்த சட்டத்திருத்தம் தேவை: ஆஸ்திரேலியப் போலீஸார் கருத்து

பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன், பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை என்று கருத்து கூறியுள்ளார்.

இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி போலீஸôரால் சோதனை செய்ய முடியாததால், ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்யமுடியாது. ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.

மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

புதன்

கோவையில் பிஸ்மி காலனியில் மதரசாவுடன் புதிய கிளை உதயம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பிஸ்மி காலனி பகுதியில் 08.06.2011 அன்று மதரசா ஆரம்பத்துடன் புதிய கிளை உருவானது. இதில் மாவட்ட செயலாளர் நவ்சாத் மற்றும் துணை செயலாளர் நாசர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

செவ்வாய்

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு

முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி எனும் அமைப்பு மிருகங்களை உயிரோடு அறுக்க தடை செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தது. முஸ்லீம்கள் மிருகங்களை அறுக்கும் ஹலால் முறையும் யூதர்கள் அறுக்கும் கோஷர் முறையும் மிருகங்களை உயிரோடு உள்ள நிலையில் அறுப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் கீழ் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேல் சபையில் நிறைவேறினால் இது சட்டமாக்கப்பட்டு விடும். ஆனால் டென்மார்க் நாட்டின் கிறிஸ்துவர்கள் மிருகங்கள் இறந்த பிறகு அறுப்பதுண்டு. இச்சட்டத்துக்கு நெதர்லாந்தின் 10 இலட்சம் முஸ்லீம்களும் 40,000 யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி தலைவர் மேரிஅன்னே தீம் “எங்கே மனித அல்லது மிருக சித்ரவதை ஆரம்பிக்கிறதோ அங்கே மத சுதந்திரத்தின் எல்லை முடிந்து விடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
inneram

இரவு பார்டியில் ரைட்:போதைப்பொருள் தடுப்பு அதிகாரி உள்பட 5 பேர் கைது

வேலியே பயிரை மேய்ந்த சம்பவங்கள் இந்தியாவை பொறுத்தவரை புதிய செய்தி அல்ல. போதைப்பொருள் தடுப்பு தினத்தில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட இரவு பார்டி ஒன்றில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆன்டி நார்கோடிக் ஸெல்(போதை மருந்து தடுப்பு பிரிவு) இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்துபேர் கைதுச் செய்யப்பட்டனர்.

இரவு பார்டியில் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மும்பை ஆன்டி நார்கோடிக் ஸெல் இன்ஸ்பெக்டர் அனில் ஜாதவ், உதவியாளர்களான சுனில் குலே, இரவு பார்டியை நடத்திய ஸ்னேஹ்ஜித் ஸஜல்கர், குஷன்குமார் ஸஜன்குமார், ஹோட்டல் மானேஜர் ராகுல்கன்னா ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர்.

சோதனை நடக்கும் வேளையில் 59 இளம்பெண்கள் உள்பட 290 பேர் பார்டியில் பங்கேற்றிருந்தனர்.இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு விடுவித்தனர். அறிக்கை வந்தபிறகு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துணை சூப்பிரண்ட் எஸ்.பி நமரத பாட்டீல் தெரிவித்தார்.பார்டி நடந்த ஹோட்டலில் இருந்து கஞ்சா, கொக்கைன், சரஸ் உள்ளிட்ட 3.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.அனில் ஜாதவை சஸ்பெண்ட் செய்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது. உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

DSC03051DSC03050










DSC03060DSC03067DSC03059







DSC03139DSC03127DSC03124

திங்கள்

ம.ம.க. வை கண்டித்து சென்னை ஆர்ப்பாட்டத்தில் கொதித்து எழுந்த மக்கள் வெள்ளம் வீடியோ காட்சிகள் சில காணக





சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்

சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும் என மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

"இந்தியாவின் சிறுபான்மையினர்: விவகாரங்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்' என்ற தலைப்பில் சென்னை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை சிறப்பு சொற்பொழிவாற்றிய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:

நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான சச்சார் கமிட்டி, இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு நிதி ஒதுக்குவது, திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த அறிக்கையில் சிறுபான்மையின சமூகத்தை பாதிக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறுபான்மையின சமூகங்கள் முழுவதும் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ரூ. 5 ஆயிரம் கோடி பட்ஜெட்டைக் கொண்ட சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்கள் கொண்டுவரப்படும்போது, ரூ. 65 ஆயிரம் கோடி பட்ஜெட் நிதியை கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட அதிக வரவு செலவு திட்டங்களைக் கொண்ட பிற துறைகளிடமிருந்து நிதி உதவியை பெற இயலாத நிலை ஏற்படும்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் வகையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகம், சம உரிமைகளுக்கான அமைச்சகமாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சச்சார் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுபோல், சம உரிமைகளுக்கான கமிஷன் அமைக்கப்பட்ட உடன், சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தை மாற்றுவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.

அப்போதுதான் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, பொருளாதார நிலையில் உயர முடியும்.

அதே நேரம் இஸ்லாமிய சமூகத்தினர், தங்களுடைய சமூகத்தின் வளர்ச்சியை குறித்து மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட சமூதாய நலனிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். லோக்பால் விவகாரம், விநாயக் சென் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் அமைதி காத்து வருவது ஏன்?

வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், இங்குள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும், அமைப்புகளும் உத்தரபிரதேசம், பிகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களை தொடங்க முன்வரவேண்டும்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தைப் பொருத்தவரை, துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்குமாறு, பல்கலைக்கழக ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அரசிடம் முறையிட்டிருப்பது தவறான முடிவு. சிறுபான்மை நிறுவனங்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு, தாங்களே தீர்வு காண வேண்டும். அரசியல் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.

கல்வி உதவித் தொகை உயர்வு: மேலும் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக ஒதுக்கப்பட்டுவந்த ரூ. 44 லட்சம் நிதி, வரும் கல்வியாண்டு முதல் ரூ. 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதுபோல் ஆராய்ச்சி (பிஎச்.டி) உதவித் தொகையை பெறும் சிறுபான்மையின மாணவர்களின் எண்ணிக்கையும் 750-லிருந்து 1,400-ஆக உயர்த்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் (எஸ்.ஐ.இ.டி.) தலைவர் மூசாராசா, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி தாளாளர் பைசூர் ரஹ்மான் சையத், கல்லூரி முதல்வர் ரௌசின் தாவூத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஞாயிறு

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக மருத்துவ உதவி.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக அண்ணா காலனியை சேர்ந்த சகோதருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது.

கோவை ஆசாத் நகர் கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் , இலவச நோட்டு, புத்தகம், கல்வி உதவி,சீருடைவழங்கும் நிகழ்ச்சி

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 24.06.2011 அன்று பொதுக்கூட்டம்,நோட்டு புத்தகம் ,  கல்விஉதவி, சீருடை வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் 120 மேற்ப்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு,புத்தகங்கள்,கல்விஉதவி, சீருடைகள்  வழங்கப்பட்டன.

சனி

அழாதே!இந்த சடலங்களை கண்டு நாம் ஏன் அழவேண்டும்?-பிரக்யாசிங் கேட்டார்




 ’அழாதே!நாம் ஏன் அழவேண்டும்?கொல்லப்பட்டது முஸ்லிம்கள் தானே?-குண்டுவெடிப்பு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீயில் கருகிய 68 உடல்களை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்து பயந்து போன நீரா என்ற பெண்ணிடம் ஹிந்துதுத்துவா பயங்கரவாதி பிரக்யாசிங் கேட்ட கேள்வியாகும்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு ஏஜன்சி நேற்று முன்தினம் சமர்ப்பித்த 25 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள விபரமாகும். குண்டுவெடிப்பு நிகழ்வதுக்குறித்து முன்னரே பிரக்யாசிங்கிற்கு தெரியும். அவளுடைய சகோதரி லவ்லி மற்றும் தோழி நீராவுடன் நள்ளிரவில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த கொடூரமான உரையாடல் நடந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அப்பொழுது பிரக்யாசிங் சூரத்தில் உள்ள வீட்டில் இருந்தார். வீட்டின் அருகே ஒரு ப்ளாட்டிற்கு தனது சகோதரி மற்றும் தோழியை அழைத்து சென்ற பிரக்யா சிங் அவ்வீட்டின் பெண்மணியிடம் தொலைக்காட்சியை ஆன் செய்ய கூறி செய்தியை பார்த்துள்ளார். அவ்வீட்டிலிருந்து வெளியேறும் முன் யாருக்கோ போன் செய்து,’நமது ஆட்கள் ஓ.கே தானே’ என விசாரித்துள்ளார்.

ரெயிலிருந்து தீயில் கருகிய சடலங்கள் வெளியே எடுக்கப்படுவதை கண்டு அழுத நீரா, பின்னர் வந்த செய்திகளை கவனித்து மரணித்தவர்களின் கூட்டத்தில் ஹிந்துக்களும் உண்டு என பிரக்யாசிங்கிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறெல்லாம் நிகழத்தான் செய்யும் என பிரக்யாசிங் நீராவுக்கு பதிலளித்துள்ளார். செய்தி கண்ட பிறகு அதனை கொண்டாட ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆர்வத்தையும் அவர் மறைத்து வைக்கவில்லை.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும் பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும் சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும்இ அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري ومسلم).
காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி) ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி முஸ்லிம்).

நான்கு மாதங்கள் புனிதமானது என்றும் அவைகள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகிறது. எனவே இம்மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாகும். இம்மாதங்கள் புனிதமானவைகள் என்று கூறி அல்லாஹ்வும் ரஸுலும் காட்டித்தராத வணக்க வழிபாடுகளை அரங்கேற்றுவது கூடாது.
عَنْ مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود أحمد).
முஜீபதுல் பாஹிலிய்யா நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? அறத்கு நபியவர்கள் நீங்கள் யார்? நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள் கேட்டார்கள்.

நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர் பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன் ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்’ (அபூதாவுத் அஹ்மத்).

இந்த ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைக்க முடியுமென்பது விளங்குகிறது.

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி உள்ள பலவீனமான ஹதீஸ்கள்:
إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும் அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.’

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தனது ‘அல்இலலுல் முதனாஹியா’ என்ற கிரந்தத்தில் இந்த ஹதீஸின் அற்விப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ‘அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்’ யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ‘ஸாததிப்னு அபிர்ரகாத்’ என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்) மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும் ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை’

இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்:
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம் ஷஃபான் எனது மாதம் ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205 206).
فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار
‘ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.’

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப் பக்கம்: 17).
رجب شهر الله الأصم،من صام من رجب يوماً إيماناً واحتساباً استوجب رضوان الله الأكبر
‘ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும்இ நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.’

(தப்யீனுல் அஜப் பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது பக்: 439).
من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار
‘எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).
من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ……قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب
‘ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது செல்வங்களையும் அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன் எந்த வித கேள்வி கணக்கும் தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20).
((من صام من رجب وصلى فيه أربع ركعات …. لم يمت حتى يرى مقعده من الجنة أو يرى له
‘ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால்இ அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல் அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21).
إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة
‘நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206இ 207). தப்யீனுல் அஜப் பக்: 26).

அன்றைய காஃபிர்களிடம் ரஜப் மாதத்திற்கு இருந்த அந்தஸ்து:

அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனிதமானதாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனலாகும். நாம் மேலே குறிப்பிட்ட ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபியவர்கள் ‘ரஜப் முழர்’ என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். காரணம் முழர் ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விடயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பது ஒரு காரணமாகும்.

இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தனர் அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அதீரது ரஜப் என்றால் என்ன?

அதீரது ரஜப் என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்கள் அளித்துள்ளனர்:

‘அபூ உபைதா குறிப்பிடும் போது நிச்சயமாக ‘அதீரத்’ என்பது ரஜபுடன் தொடர்புடையதாகும். நெறுக்கத்தை பெறுவதற்காக ரஜப் மாதத்தில் அறுக்கப்படும் ஒரு குர்பானியாகும். அறியாமை காலத்தில் அரபுக்கள் ஏதாவது ஒரு தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ச்சை செய்து அது நிறைவேறிவிடுமானால் நான் இவ்வாறு இவ்வாறு ரஜப் மாதத்தில் ஒரு ஆட்டை அறுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று கூறுவது தான் அதீரத் என்கிறார்.’ (கரீபுல் ஹதீஸ் 1: 195 196).

அபூதாவுத் குறிப்பிடும் போது: ‘அதீரத்’ என்பது ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்.

அல்கத்தாபி குறிப்பிடும் போது: ‘அல் அதீதர்’ என்பது ஹதீஸிலிருந்து விளங்குவது அது ரஜப் மாதம் பலியிடப்படும் ஒரு ஆடாகும்.

இதில் சரியான கருத்து: ‘அதீரத்’ என்பது அறியாமைக் கால மக்கள் எந்த வித நேர்ச்சையுமின்றி நிறைவேற்றும் ஒரு குர்பானியாகும். அழ்ஹாவில் நிறைவேற்றும் உழ்ஹியாவை போன்று இவர்களிடம் இந்த நடை முறை இருந்து வந்தது. அவர்களில் நேர்ச்சைவைத்து அதை நிறைவேற்றுபவர்களும் இருந்தனர்.

அதீரத்தின் சட்டமென்ன?
عَنِ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ وَالْعَتِيرَةُ فِي رَجَبٍ (البخاري ومسلم).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பரஅ’ என்பதும் ‘அதீரத்’ என்பதும் இல்லை. பரஅ என்றால் ஒட்டகத்திற்கு கிடைக்கும் முதல் குட்டியை தங்களது கடவுள்களுக்காக அறுத்துப் பலியிடுவதாகும். அதீரத் என்றால் ரஜப் மாதத்தில் (ஒரு ஆட்டை அறுத்து பலியிடுவதாகும்) நிறைவேற்றப்படும் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புஹாரி முஸ்லிம்).

‘அதீரத்’ விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். இதில் சரியான கருத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்: அதீரத் என்பதை நிறைவேற்றுவதற்கு சில ஹதீஸ்களில் அனுமதி இருந்தாலும் நாம் மேற்குறிப்பிட் ஹதீஸின் மூலம் அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. அது தடுக்கப்பட்டு விட்டது. மேற்சொன்ன ஹதீஸின் மூலம் அது மாற்றப்பட்டு விட்டது என்பதற்குரிய காரணங்கள்: மேற்சொன்ன ஹதீஸை அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களாகும். அவர்கள் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு கைபர் வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதீரத் என்ற இந்த வழக்கம் அறியாமைக் காலம் முதல் உள்ள ஒன்றாகும்.

பரஅ அதீரத் என்பது மாற்றப்பட்டு விட்ட ஒன்று என்று பெரும் பாலான அறிஞர்களின் கருத்தென காலி இயாழ் குறிப்பிடுவதாக இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள். (அல்மஜ்மூஃ 8: 446).

இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி (ரஹ்) மற்றும் இமாம் இப்னுல் முன்திர் (ரஹ்) அவர்களும் அதீரத் என்பது தடுக்கப்பட்ட ஒன்று நிறைவேற்றக்கூடாத ஒன்று என குறிப்பிடுகின்றனர்.

ரஜப் மாதத்தை விஷேச நோன்பு தொழுகை உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்:

ரஜப் மாதத்தில் விஷேச நோன்பு தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை மற்றும் அதிகமான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் என்பதை நாம் ஆரம்பத்திலே சுற்றிக்காட்டினோம். எனவே இம்மாத்தில் விஷேச நோன்புக்கோ தொழுகைக்கோ எந்த ஆதாரமுமில்லை.

இப்னு அபீ ஷைபா தனது முஸன்னப் எனும் கிரந்தத்தில் குறிப்பிடும் போது ‘ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள் மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும்.’ (முஸன்னப் 3: 203). ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் பார்க்க: (இர்வாஉல் அலீல் 4:113).

அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்’

(அல்முஃனி 3: 167 அஷ்ஷரஹுல் கபீர் 2: 52 மஜ்மூஉல் பதாவா 25: 291).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: ‘ரஜப் மாதத்தை வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பதென்பது நூதனமான ஒரு நடை முறையாகும் அதை விட்டு விலகி இருப்பது அவசியமான ஒன்றாகும். ரஜப் மாதத்தில் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பது வெறுக்கத்தக்க ஒரு விடயம். இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறஞர்களும் இதே கருத்தில் உள்ளனர்.’ (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2: 624 625).

முஸ்னத் மற்றும் ஏனைய கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபி மொழியில்இ நபியவர்கள் புனிதமான மாதங்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். புனிதமான மாதங்கள்: ரஜப் துல்கஃதா துல்ஹிஜ்ஜா முஹர்ரம். எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) 25: 290 291).

ரஜப் மாதத்தில் உம்ரா செய்யலாமா?
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجَبٍ ழூ(البخاري).
உர்வதிப்னு ஸுபைர் (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்: ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை.’ (புஹாரி).

‘அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் உம்ரா செய்தார்கள் என்று கூறிய போது அதை ஆயிஷா (ரலி) அவர்கள் நிறாகரித்தார்கள். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மறுப்பேதும் தெரிவிக்காது அமைதியாக இருந்தார்கள்’ (புஹாரி முஸ்லிம்).

ஒரு சிலர் ரஜப் மாத்தில் உம்ரா செய்வது சிறப்பிற்குரிய காரியம் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நாம் மேற்குறிப்பிட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து நபியவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இதுவும் ஒரு பித்ஆவாகும்.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும் பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை.

மிஃராஜ் எந்த வருடம் நிகழ்ந்தது என்பதிலே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன. அது குறிப்பாக இந்த ஆண்டில் இந்தத்திகதியில் நிகழ்ந்தது என ஆதாரம் இருந்தாலும் அதை சிறப்பிப்பதற்கு நபியுடைய வழிகாட்டல் இல்லாமல் எவருக்கும் சிறப்பிக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் செய்வாரெனில் அது தெளிவான பித்அத்தாகும் அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைப்பதற்கு பதிலாக அவனது கோபம் தான் கிடைக்கும்.

மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர் ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும்.

‘நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி முஸ்லிம்).

அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி செய்யப்படும் அமல்களுக்கு மாத்திரம் தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தராத விடயங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த பெறுமதியுமில்லை அவைகள் நிராகரிக்கப்படும். எனவே பித்அத்துக்களை விட்டு எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருப்போமாக.
dharulathar

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் சுவாமி அஸிமானந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்களும், அதுத்தொடர்பான உபகரணங்களும் வாங்குவதற்காக இத்தொகை வழங்கப்பட்டது என குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் முன்பதிவுச்செய்யப்படாத 4 பெட்டிகளில் குற்றவாளிகள் வெடிக்குண்டுகளை ஸ்தாபித்துள்ளனர். 13 மற்றும் 14-ஆம் நம்பர் பெட்டிகளில் வெடிக்குண்டு வெடித்துள்ளது. 15-ஆம் நம்பர் பெட்டியில் குண்டுவெடிப்பதற்கு முன்பு செயலிழக்கச்செய்யப்பட்டது.-குற்றப்பத்திரிகை கூறுகிறது.

அஸிமானந்தா, ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா, சுனில் ஜோஷி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கொலை, கொலை முயற்சி, தேசத்துரோகம், குற்றகரமான சதித்திட்டம் ஆகிய பிரிவுகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெடிக்காத குண்டுகள் இருந்த சூட்கேஸின் உறை இந்தூரில் கோத்தாரி மார்க்கெட்டில் அபிநந்தன் பேக் செண்டரில் வாங்கியது கண்டறியப்பட்டதுதான் இந்த வழக்கில் துப்பு துலங்குவதற்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

எம்.கே பேக் செண்டரில் இக்பால் ஹுஸைன் என்பவர் இந்த உறையை தைத்திருந்தார். உறையின் மீது அப்போலோ என கையால் எழுதப்பட்டிருந்தது.ஆர்.டி.எக்ஸ், டி.என்.டி, ஸல்ஃபர், பெட்ரோல் ஆகிய அதீத சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் வெடிக்குண்டை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்ஜோதாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டும் என்பது அஸிமானந்தாவின் லட்சியமாகும்.ஹிந்து கோயில்களில் போராளிகள் தாக்குதல் நடத்தினார்கள் எனக்கூறி கோபமடைந்த அஸிமானந்தா தனது உணர்வை சுனில்ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர், பரத்பாய் ஆகியோருடன் பகிர்ந்துக்கொண்டார்.

’குண்டிற்கு பதில் குண்டு’ என்பது அஸிமானந்தாவின் கொள்கையாகும்.2006 வாரணாசி குண்டுவெடிப்பிற்கு பிறகு அதற்கு பழிவாங்குவதற்காக சுனில்ஜோஷியும், அஸிமானந்தாவும் தீர்மானித்துள்ளனர்.இதற்காக உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஹிந்து தலைவர்களை கண்டு அவர்களிடம் உதவி கோருவதற்காக சுனில்ஜோஷி, பரத்பாய் ஆகியோருக்கு கட்டளையிட்டு பயணச்செலவாக 25 ஆயிரம் ரூபாயை அஸிமானந்தா அளித்துள்ளான்.

2006 ஆம் ஆண்டு மே மாதம் ஜோஷி அஸிமானந்தாவை சந்தித்து தனது பயண விபரங்களை ஒப்படைத்துள்ளான்.பரத் பாய் முதலில் ஜார்கண்ட் சென்றுள்ளான்.அங்குவைத்து தேவேந்திரகுப்தா பிஸ்டல், வெடிப்பொருட்கள், சிம்கார்டு ஆகியவற்றை வழங்கியுள்ளான்.பின்னர் பரத் பாய் ஆக்ரா மற்றும் கோரக்பூருக்கு சென்றுள்ளான்.

அதன் பின்னர் நாக்பூருக்கு சென்று இந்திரேஷ்குமாரை சந்தித்துள்ளான்.அங்குவைத்து வெடிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக இந்திரேஷ்குமார் ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளான். பின்னர் குஜராத் மாநிலம் வல்ஸாதில் பரத் பாயின் வீட்டில் வைத்து கூட்டம் நடந்தது.2006 ஜூன் மாதம் சதித்திட்டம் தீட்டிய முக்கிய கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அஸிமானந்தா, பிரக்யாசிங் தாக்கூர், டாங்கே, கல்சங்க்ரா, லோகேஷ் சர்மா, அமித் சவுகான், பரத்பாய் ஆகியோர் பங்கேற்றனர்.மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அஸிமானந்தா உத்தரவிட்டுள்ளார்.

ஹிந்துக்கள் கொலைச்செய்யப்படும் வேளையில் அரசு சம்ஜோதா எக்ஸ்பிரஸை ஓட்டுகிறது.ஆதலால், அந்த ரெயிலில்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டும் என ஜோஷி கூறியுள்ளான்.குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான பொறுப்பையும் ஜோஷி ஏற்றுக்கொண்டுள்ளான்.குண்டுவெடிப்பு நிகழ்ந்து இரண்டு தினங்களுக்குள் அஸிமானந்தா, ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் குஜராத்தில் சபரிடாம் ஆசிரமத்தில் மீண்டும் கூடியுள்ளனர்.யார் வெடிக்குண்டை தயாரித்தார்? என அஸிமானந்தா கேட்டுள்ளான்.’அது ஆசிரியரின்(டாங்கே) வேலையாகும்’ – என ஜோஷி பதிலளித்துள்ளான்.

2007-ஆம் ஆண்டு சுனில்ஜோஷி மக்கா மஸ்ஜிதிலும், இதர இடங்களிலும் கூடுதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பணம் கேட்டதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.

புதன்

கோவை சாரமேடு கிளையின் சார்பாக இலவச மருத்துவ முகாம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக 19.06.2011 அன்று இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் சர்க்கரை நோய், ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவை மக்களுக்கு இலவசமாக கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன. இதில் க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்தனர்.