தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை
 ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு
 பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையை பார்க்க தேவை இல்லை. விஞ்ஞான முறையில் கணித்துத்தான் முடிவு செய்ய வேண்டும். இது தான் குர்ஆன் ஹதீங் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமி்ட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டவுடன் இவர்கள் விவாதம் செய்வதில் இருந்து பின் வாங்கி விட்டனர். பகிரங்கமாக இதை தங்கள் இணைய தளத்திலும் பின்வருமாறு அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க

புதன்

ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு


 சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் வெளியிட்டுள்ள அறிக்கை: 2011ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் கடைசி நிமிட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் ஹஜ் பயணி என்று தலைப்பிட்டு வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் இயல்பான கால அவகாசத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும் ஹஜ் பிரிவு என்று மாற்றி பாஸ்போர்ட் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

april fool -ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!


ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.

April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது

முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.

எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

பொய்க் கலாச்சாரம்

இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094

ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொய்ச் சத்தியம் செய்தல்

இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.

இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)
மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.
இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.

பொய் சாட்சி கூறல்

ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)

ஏமாற்றுதல்

இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)

“மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)

முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.

கேலி செய்தல்

மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)

இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

இழிவாகக் கருதுவது

இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)

இதல்லாம் ஜாலிக்காக செய்திகன்றோம் இதில் என்ன தவறு என்று சிலர் போலி வியாக்கியானம் கொடுப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் தன்னை யாரும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.

தன்னை யாரேனும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விட்டால்அது நமக்கு அசிங்கம் இழிவு என்று நினைக்கும் இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபுல் ஆக்கும் போது அதை மறந்து விடுவது ஏன்?

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
tntj.net

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு

 
அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அவ்வாறானதோர் பரீட்சார்த்த வடிவமைப்பை தாம் தற்போது மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் "சென்டர் போ டிவலப்மென்ட் ஓப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்" நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் மௌனமொழியில் கணணியுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு வந்த போதும் இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் வாய்ப் பேச்சு மூலம் கணணிகளை இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆராய்ச்சிகள் சீ-டோக்(C-Dac) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் குறித்த முயற்சிக்காக இந்திய மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சு நிதியுதவி அளித்துள்ளது.

பேசும் கணணிகளை தயாரிக்கும் பணிகள் இரண்டு முறைகளில் செயற்படுத்தப்படவுள்ளதாக சீ-டோக்(C-Dac) ஐச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஹேமந்த் தர்பாரி தெரிவித்துள்ளார். வாய்மொழியிலிருந்து எழுத்துரு முறையிலும், எழுத்துருவிலிருந்து ஒலிவடிவிக்கு மாற்றும் முறையிலும் பிரஸ்தாப கணணி செயல்பட உள்ளது.

கணணி பயனாளிகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பேசும் போது கணணியில் உள்ள மென்பொருள்கள் வாய்மொழி வார்த்தைகளை எழுத்துருக்களாக மாற்றி தேவையான தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை ஒலிவடிவில் தெரிவிக்கின்றன.

இத்தகைய கணணிகள் கிராமப் பகுதிகளில் அதிகளில் பயன்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். கிராமப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளுக்கு ஏற்ப கணணி விசைப்பலகைகளை வடிவமைக்க முடியாமையே அதற்கான காரணமாகும்.

தற்போது ஆங்கிலம், ஹிந்தி, உருது, வங்காளி ஆகிய மொழிகளில் இந்த வகையான கணணிகள் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

புதுவை தேர்தல் நிலைபாடு – புதுவை பொதுக்குழுவிற்கு பின் செய்தியாளர்களுக்கு மாநிலத் தலைவர் அளித்த பேட்டி!


புதுவை தேர்தல் நிலைபாடு – புதுவை பொதுக்குழுவிற்கு பின் செய்தியாளர்களுக்கு மாநிலத் தலைவர் அளித்த பேட்டி!

சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தாயிக்கள் தேர்வு – தாயிக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு


         இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்வதையும், அழைப்பாளர்கள் பற்றாக்குறை அதிகரிப்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே அழைப்பாளர்களுக்கான ஒரு மாத பயிற்சி முகாம் சென்னை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் நடந்து வரும் நிலையில்,  தமிழகம் முழுவதும் உள்ள அழைப்பாளர்களின் மார்க்க அறிவைச்சோதிப்பதற்காக மேலும் அவர்களது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும்  கடந்த 27/03/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருவாரூர் மற்றும் நெல்லை என 5 மண்டலங்களில் தேர்வு நடைற்றது.
இந்தியா முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் இருக்கும் அழைப்பாளர்கள் மிக ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு என இரண்டு கட்டமாகத் தேர்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணி முதல் 12.30 வரை எழுத்துத் தேர்வுகள் நடந்தன.
ஆன்லைன்பிஜே தளத்தில் இடம்பெற்றிருந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கேள்விகளும், அத்தோடு தவ்ஹீத் கொள்கை தமிழகத்தில் சந்தித்த இடர்பாடுகள் குறித்த கேள்விகளும் இடம்பெற்று இருந்தன.
மொத்தம் 200 மதிப்பெண்களை உடைய சரியானதைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா தவறா மற்றும் இரு வரிகளில் விடைதருக என்ற அமைப்பில் கேள்விகள் இடம்பெற்று இருந்தன.
மதியம் லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்குப் பிறகு வாய்மொழித்தேர்வுகள் நடைபெற்றன. வாய்மொழித் தேர்வில் சூராக்கள் மனனம் மற்றும் துவாக்கள் கேட்கப்பட்டன.
அத்தோடு தாயிக்களின் குர்ஆன் ஓதும் திறனை சோதிக்கும் பொருட்டும் சோதனைகள் நடந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மாலை 4.30 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மாலை 5.30 வரை தேர்வுகள் நீடித்தன. இந்தத் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் நன்கு சிந்தித்து பதிலளிக்கும் வகையிலும், மார்க்க அறிவுக்கு மேலும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இருந்ததாக தேர்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு இதுபோன்ற தேர்வுகளை தொடர்ந்து நடத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்கள்.

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 26.03.11

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது . இதில் சேலம் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் ராஜூ முஹம்மது அவர்கள் அழைப்பு பணியின் அவசியமும், அழைப்பு பணி எப்படி செய்வது  என்ற தலைப்பிலு ம் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

தயவு செய்து சிந்தியுங்கள்!

தொகுப்பு: Habiburrahman
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’தின் தேர்தல் ஆதரவு நிலையை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த மடலை ஒரு முறையேனும் முழுதாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாமெல்லாம் முதன் முதலில் ஓர் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க வாக இருந்தாலும் அது அ.தி.மு.க வாக இருந்தாலும் ரெண்டுமே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதகங்களைத்தான் அதிகம் செய்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அரசியல் என்றாலே அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், அவரவர்களுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளுதல், அடக்குமுறைகள், லஞ்சம், சிறுபான்மை சமுதாயத்தை நசுக்குதல்... இவையெல்லாம் அவர்களோடு ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள். இதில் அவர்களுக்குள் யாருக்கும் விதிவிலக்கில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் வாழும் நாம் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறேன் என கிளம்பினால், முழுநேர அரசியலில் ஈடுபட்டால் - முஸ்லிம் அல்லாத மற்ற மற்ற சமுதாயத்தவர்களின் ஆதரவையும் பெற்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்து; அனைத்து விழயங்களிலும் வளைந்துகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு; இறுதியில் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பகிரங்க வழிகேட்டு காரியங்களும் நம் கண் முன்னே நடக்கும்போது அதை தடுக்க திராணியற்றவர்களாக மாறி,இறுதியில் அரசியல் சாக்கடையில் விழுந்த பன்றிகளாக உருவெடுப்போம்,தள்ளப்படுவோம். நமது ஒரே உயர் நோக்கமான மறுமை வாழ்கையை பாழாக்கி கொள்வோம். மரணத்திற்குப்பின் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவோம்.

இங்கே தான் அறிவுள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தேர்தலில்களில்தான் ஒவ்வொருஅரசியல்வாதியும் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது? அதில்எவற்றையெல்லாம் பூர்த்தி செய்தால் (அல்லது) பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தால் அவர்களுடைய ஓட்டை நாம் அறுவடை செய்யலாம்,அதன்மூலம் நாம் ஆட்சி அதிகாரத்தில் அமரலாம் என சிந்திப்பார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைத்தான், இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில், அதே நேரத்தில் நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியனும் சிந்திக்க வேண்டும். அதைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.


"தி.மு.க வாக இருந்தாலும் அ.தி.மு.க வாக இருந்தாலும் - அரசியல்வாதிகள் செய்யற அனைத்து அட்டூழியங்களைத்தான் நீங்கள்ஒவ்வொருவரும் தவறாமல் மாறி மாறி செய்திட்டு வர்றீங்களே,உங்களை நல்லவங்களா மாத்தறது எங்கள் வேலையுமில்லை,அதற்காக நாங்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டு எங்கள் மறுமை வாழ்கையை பாழாக்கிக்கொள்ள விரும்பவுமில்லை. ஆக, எங்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு நீ என்ன செய்வாய் (அல்லது) போன தேர்தல் வாக்குறுதிகளில் செய்யறேன்’னு சொன்னதை இதுவரைக்கும் என்னென்ன செய்து முடித்தாய்; அதை சொல்லு? அதில் உள்ள சாதக பாதகங்களை அலசிப்பார்த்து முஸ்லிம்களாகிய நாங்கள் உனக்கு ஒட்டு போடலாமா வேணாமா என்பதை முடிவு செய்வோம்." என்ற வழிமுறையைத்தான், என்ற அடிப்படையைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலிலும் பின்பற்றி வருகிறது. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்.


“எங்களுக்கு 3 சீட்டுக்கள் கொடுத்தால் போதும், எங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு நீங்கள் எவ்வித வழிவகைகளையும் செய்யவில்லையானாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையானாலும் பரவாயில்லை (அல்லது) எதிர்கால சமுதாய விடிவுக்கான வாக்குறுதிகளே இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை - எங்கள் ஆதரவு உங்களுக்கே” என்று அடிமை சாசனம் எழுதி கொடுக்கும் சமுதாய இயக்கங்கள் மத்தியிலே எங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம். (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே). சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் (அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக்கொண்டு) செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இதுவரை எதிர்கொண்ட எந்த தேர்தலாக இருந்தாலும் (அல்லாஹ்மேல் தவக்கல் வைத்து) முஸ்லிம் சமுதாயத்தின் நன்மையை மட்டுமே முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்து வருகிறது.

2004 இல் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" நாம் தஞ்சை பேரணியை துவக்கி நம்முடைய மாபெரும் மக்கள் கூட்டத்தை முதன் முதலாக காட்டி, நமது வாழ்வாதார கொள்கையான தனி இட ஒதுக்கீடு கொள்கையை முன் வைத்தோம்; அப்போதைய தி.மு.க - நாம் ஒரே மூச்சாக முன்னெடுத்து சென்ற முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததால் அந்த பாராளமன்ற (M.P.) தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒட்டுமொத்த ஆதரவு தெரிவித்து40க்கு 40 என்ற கணக்கில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தோம்.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).


அந்த 2004 பாராளமன்ற (M.P.) தேர்தலில் வெற்றி பெற்ற பின் தி.மு.க. தான் தந்த வாக்குறுதியை வசதியாக மறந்தது.

பின்னர், (நாம் த.மு.மு.க.விலிருந்து விலகிய பின்) 2 ஆண்டுகள் கழித்து, 2006தமிழக சட்டசபை (M.L.A) தேர்தலின் போது கும்பகோணத்தில் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" மீண்டும் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை கூட்டி , நம் வாழ்வாதார கொள்கையான இட ஒதுக்கீடு கொள்கையைத்தான் ஆணித்தரமாக மீண்டும் முன் வைத்தோம்.

அப்போது, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை வசதியாக மறந்த தி.மு.க., 2006 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தலில் 234 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள், நாங்கள் இட ஒதுக்கீட்டை தந்துவிடுகிறோம் என தனது ஏமாற்றும் வேலையை அரங்கேற்றியது.

அப்போது, ஒரு முஸ்லிம் இரண்டு முறை ஏமாறமாட்டான் என்பதற்கேற்ப தி.மு.க.வின் ஏமாற்று வாக்குறுதிகளுக்கு அடிபணியாமல்; மறுபுறம் இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் ஆணையத்தை ஜெயலலிதா அமைத்ததால் நாம் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இருப்பினும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).

ஆனால், அந்த 2006 சட்டசபை தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தின் மொத்த ஓட்டுக்களும் அ.தி.மு.க.வின் பக்கம் சாய்ந்ததால் , தி.மு.க. பல தொகுதிகளில் மிக சொற்ப ஓட்டுக்களின் வித்யாசத்திலேயே வெற்றி பெற்று,பெரும்பான்மையை இழந்து, ஒரு மைனாரிட்டி ஆட்சியைத்தான் தமிழகத்தில் அமைக்க முடிந்தது.

இதில் நன்கு பாடம் பெற்ற தி.மு.க. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இட ஒதுக்கீட்டை வழங்கிய பின்னும் அதை முஸ்லிம்கள் முழுமையாக பயன்படுத்தாத விதத்தில் அதில் நிறைந்திருந்த பல்வேறு குளறுபடிகளை பல போராட்டங்களின்மூலம் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துக்காட்டிய பின் அதில் உள்ள குளறுபடிகளை ஒத்துக்கொண்ட தமிழக முதல்வர் அதற்கான முறையான ஆவணங்களை செய்வதாக உறுதியளித்தார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

2009 பாராளமன்ற (M.P.) தேர்தலின்போது, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டிற்கானவாசலை திறந்து வைத்து அதை முதன் முதலாக வழங்கிய தி.மு.க. வுக்கு - "ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்குறுதியை ஒழுங்காக நிறைவேற்றுவான்" என்று பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).

2011 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தல் வரும் முன்னரே; சென்ற வருடம் 2010ஜூலை 4ல் சென்னையில் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" மீண்டும் ஒரு மிகப்பெரும் மக்கள் வெள்ளத்தை கூட்டி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் படி மத்திய அரசு முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடுத்தகோரிக்கையை ஆக்ரோஷமாக முன் வைத்தது. டெல்லி சென்று பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரடியாக சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அதற்குண்டான கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இப்பொழுது 2011 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்முஸ்லிம்களுக்கு இப்பொழுது இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5சதவீதமாக உயர்த்தி தரும் அணிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவிக்கும் என; அதாவது ஆளும் தி.மு.க அரசு இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் தி.மு.க.வை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறாவிட்டால் அ.தி.மு.க அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். தி.மு.க இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னால் அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்ற செயல்திட்டம் சேலம் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதை பல மாதங்களுக்கு முன்னரே அரசியல் தலைவர்கள் காதில் விழும் அளவுக்கு பத்திரிக்கை செய்திகள் மூலமாகவும், ஊர் ஊராக போஸ்டர் அடித்தும் ஒட்டியது. இப்பொழுது நடைமுறையில் இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இருக்கும் குறைபாடுகளை களைய தனி கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

இதில் இட ஒதுக்கீட்டின் சதவீதத்தை இப்பொழுதே உயர்த்தி தரும் இடத்தில(ஆட்சியில்) இருக்கும் தி.மு.க. அதை செய்யாமல், இரண்டாம் கோரிக்கையான வெறும் கண்காணிப்பு ஆணையத்தை மட்டும் அமைத்தது.


இதனால், தி.மு.க.வினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அ.தி.மு.கவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை தி.நகரில் அவசர செயற்குழு கூட்டி முடிவு செய்யப்பட்டது (இந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது). ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அ.தி.மு.க இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. செயற்குழு முடிந்தும் கூட தி.மு.க.வினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள். அ.தி.மு.க. இரண்டாம் நிலை அமைச்சர்கள் பல தடவை நம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு நேரடியாக வருகை தந்து ஜெயலலிதா உங்களை சந்திக்க விரும்புகிறார்கள் என கூறினார்கள். ஆனால்,இதை ஏற்றுக்கொள்ளாத நாம் நீங்கள் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என அறிவிக்காதவரை நாம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) யாரையும் சந்திக்க வர மாட்டோம் என திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம். ஏனென்றால், இட ஒதுக்கீட்டை பற்றி ஒரு அறிவிப்பும் வெளிவராத நிலையில் நாம் போய் ஜெயலலிதாவை சந்தித்தால் அந்த சந்திப்பையே பயன்படுத்தி பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க. வையே ஆதரிக்கிறது என பரப்பி விடுவார்கள் என நாம் அஞ்சினோம்.

ஆனால், அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் “உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது. இந்நிலையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை முதலில் வெளிவந்தது.வழக்கம் போல் இலவசங்களை அள்ளி வீசும் தேர்தல் அறிக்கையாக அது இருந்தாலும், நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதமாக என்னென்ன அம்சங்கள் கூறப்பட்டிருக்கிறது என்பதை நோக்கும்போது அதில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதை பற்றி பரிசீலிக்கப்படும் என தி.மு.க.அறிவித்திருந்தது.


எனினும், நாம் சென்னை செயற்குழுவில் ஏற்கனவே முடிவுசெய்தபடி ஆட்சியில் இருந்தவர்கள், (தி.மு.க.) இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்திஅறிவிக்கக்கூடிய இடத்தில இருந்தவர்கள்; அதை அதிகரித்து சட்டமாக ஆக்காமல் தேர்தல் அறிக்கையில் மட்டும் குறிப்பிட்டிருப்பதால் நாம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அமைதியாக இருந்தோம்.

இதன் பின்னர் வெளிவந்த அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நம்மை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வரிக்கு வரி தி.மு.க.வின் இலவச தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு மடங்காக காப்பி அடித்த ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரே ஒரு வாசகத்தை கூட இடம்பெற செய்யாமல்; “இஸ்லாம்” என்றோ “முஸ்லிம்” என்றோ ஒரேயொரு வார்த்தையை கூட அ.தி.மு.க. வுடைய தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்யாதது நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஜெயலலிதா இப்பொழுதே துணிந்து செய்த ஒரு மிகப்பெரும் துரோக செயலாகவே நமக்கு தெரிந்தது.

இதை பொறுத்துக்கொள்ளாத நாம், நம்மை இடைவிடாது வந்து சந்தித்த அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை தொடர்புகொண்டு கேட்டதற்கு , முதலில் மழுப்பிய அவர்கள் பின்னர் இவ்வாறு "முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதால் அது எங்கு மற்ற சமுதாய ஓட்டுக்களை பிரித்துவிடுமோ என அஞ்சித்தான் அம்மா அவர்கள் இதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்யவில்லை" என கூறினார்கள்.

என் அருமை இஸ்லாமிய சகோதரர்களே, இங்குதான் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இன்னும் தேர்தலே நடக்கவில்லை அவர்கள் வெற்றியடைவார்கள் என்பதே உறுதி செய்யப்படவில்லை,இப்படி இருக்கும் பொழுது “புதிதாக அல்ல, ஏற்கனவே” எதிர் (தி.மு.க.) அணியினால் அவர்கள் ஆட்சியில் வழங்கபட்டிருக்கிற இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுப்போம் என்ற ஒரு வார்த்தையை (அதுவும் எதிர் (தி.மு.க.) அணி ஏற்கனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்ட்ட ஒரு வார்த்தையை) இவர்களுடையதேர்தல் அறிக்கையில் சேர்க்க இவர்களுக்கு மனம் வரவில்லை என்றால், அதை சேர்த்தால் எங்கு மத்த சமுதாய ஓட்டுக்களை அது பிரித்துவிடுமோ என இப்பொழுதே அவர்கள் அஞ்சுவார்கலேயானால்;இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் ஜெயித்தபின் இட ஒதுக்கீட்டை உயர்திக்கொடுப்பார்கள் என எப்படி ஒரு முஸ்லிம் நம்புவான்?இவர்களை நம்பி எப்படி ஒட்டு போட ஒரு முஸ்லிம் முன் வருவான்?இப்பொழுதே, ஒரு வாக்குறுதி கொடுப்பதற்கே பின் வாங்கும் இவர்கள் நாளை இட ஒதுக்கீட்டை உயர்திகொடுப்பார்கள் என்பது எப்படி நிச்சயம்?

இதையெல்லாம் யோசித்துபார்த்து ஒரு சரியான முடிவை எடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் அவசரமான பொதுக்குழுவை கூட்டியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எந்த தேர்தல், சமுதாய பிரச்சனையாக இருந்தாலும், செயற்குழு பொதுக்குழு ஆகியவற்றைக்கூட்டி அப்போது முன்னிருக்கும் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கமாக எடுத்து சொல்லி,சமுதாயத்தின் நலன் கருதி என்னமுடிவு எடுக்கலாம் என்பதை ஒழுங்கான வாக்கெடுப்பை நடத்தி அதில் அதிகமானவர்களின் ஆதரவு பெற்ற கருத்து என்னவாக முடிவுக்கு வருகிறதோ அதைதான் (அல்லாஹ்மேல் தவக்கல் வைத்து) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்பற்றி வருகிறது. (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்).
 
நன்றி-கொள்ளுமேடு TNTJ.

செவ்வாய்

nokia,samsung,LG,உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து பிளாக்பெரி நிறுவனமும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆ‌லையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

நோக்கியா, சாம்சங், எல்.ஜி., உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த மொபைல் போன் நிறுவனங்களைத் தொடர்ந்து பிளாக்பெரி நிறுவனமும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆ‌லையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பை மட்டுமின்றி ஏற்றுமதி அளவையும் அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியா, உலக நாடுகளின் முக்கிய ஆராய்ச்சி மையமாகவும், விற்பனை மற்றும் ஏற்றுமதி சந்தையாகவும் விளங்குவதால் தங்களின் புதிய ஆலையை இந்தியாவில் துவங்க திட்டமிட்டிருப்பதாக பிளாக்பெரி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பிளாக்பெரி நிறுவனம், இந்தியாவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி தொழில் மற்றும் கம்பெனி பங்குதாரர்களை கொண்டிருப்பதாகவும் பிளாக்பெரி நிறுவனத்தின் இந்தியாவிற்கான ஆராய்ச்சி பிரிவு தலைவர் ராபின் தெரிவித்துள்ளார். குறைந்த முதலீட்டில் அதிகளவிலான மொபைல் மாடல்களை உற்பத்தி செய்ய பிளாக்பெரி திட்டமிட்டுள்ளது. சுமார் 150

"தேர்தல் என்பது ஊழலின் ஊற்றுக்கண்" - குரைஷி

தேர்தல் என்பது ஜனநாயக நாடுகளில் மிகப்பெரும் ஊழலுக்கு வித்திடும் களமாக மாறிவருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சலாஹுத்தீன் யாகூப் குரைஷி கவலை தெரிவித்துள்ளார். இந்த ஊழல் பணத்துக்கெதிராகப் போராடுவது தேர்தல் ஆணையத்தின் புதிய, தலையாய பொறுப்புகளில் ஒன்று என்றார் அவர்.


நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளில், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் "பணம்" கடத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று, ஜார்க்கன்ட் மாநில திரிணாமூல் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் சுமார் 57 இலட்சம் ரூபாயுடன் டெல்லியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குச் செல்ல இருந்த போது பிடிபட்டார். தனது நிறுவனத்துக்கே அப்பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்ததால் அவரை விடுவிக்க வேண்டியதாயிற்று. "அந்தப் பணம் கிடைத்த வழிகளை அவரால் சொல்ல முடிந்தது தான். ஆனால், தேர்தல் நடக்க இருக்கும் அஸ்ஸாமில் அந்தப் பணத்தை எப்படி பயன்படுத்துவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது " என்றார் தலைமை ஆணையர்.

"ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்காக இரண்டு கோடி வரை செலவிடுகிறார்கள் என்றால், பத்து கோடி வரை அதன் மூலம் வருவாய் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லலாம். இந்தச் செலவின் பொருட்டு குற்றப்பின்னணி உடையவர்களையும் பண முதலைகளையும் வேட்பாளர்கள் 'சார்ந்து' நிற்க வேண்டியதாகிறது. இதனால் 'சட்டம் இயற்றும் தகுதி'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், இவர்கள் இதே பண முதலைகளுக்கும் குண்டர்களுக்கும் இவர்கள் வளைந்து கொடுக்க வேண்டியதாகி விடுகிறது " என்றார் குரைஷி.

அது மட்டுமின்றி, "இந்த ஊடகங்களுக்கும் அரசியல் மையங்களுக்கும் உள்ள தொடர்பும் கவலை அளிக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சார தேர்தல் அறிக்கைகளையே 'தலையங்கமாக'த் தீட்டும் ஊடகங்களும் இருக்கின்றனவே " என்று வேதனைப் பட்டார் தலைமை தேர்தல் ஆணையர்.

இந்தியர்களுக்கு பெருமை-ஆசியா-பசிபிக்கில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்



ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தக ஆலோசனை நிறுவனமான பிஇஆர்சி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஊழல் நாடுகளுக்கு 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் இந்தியா 8.67 புள்ளியைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளும், இந்தோனேசியா 9.25 புள்ளிகளும், கம்போடியா 9.27 புள்ளிகளும் பெற்று ஊழல் மிகுந்த நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.

சீனா 7.93 புள்ளிகளும் வியட்நாம் 8.3 புள்ளிகளும் பெற்றுள்ளன. தாய்லாந்து 7.55 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

ஹாங்காங் 1.10 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 1.39 புள்ளிகளும், ஜப்பான் 1.90 புள்ளிகளும், அமெரிக்கா 2.39 புள்ளிகளும் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் 0.37 புள்ளிகள் மட்டும் பெற்று நற்சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அளவிலான அரசியல் தலைவர்களைவிட இதர சிறு பதவிகளில் உள்ள தலைவர்களிடமே ஊழல் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தேர்தல் கூத்து பாரீர் ???


சென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்!

சென்னை பாரிமுனையில் பிராட்வே சாலையில் இமேஜ் ஆப்டிக்கல் என்ற கண்ணாடி ஷோரூம் அமைந்துள்ளது. அந்தப்பகுயில் வந்து செல்லும் மக்கள் தொழுவதற்கு இடம் தேடி மிகவும் சிரமப்படும் அப்பகுதி மக்களின் அவலத்தைக்கண்ட‌ அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உமர் அப்துல்லாஹ், அந்த கட்டிடத்தின் முதல் தளத்தின் ஒரு பகுதியை தொழுகை நடத்துவதற்கு பள்ளி அமைத்துக்கொள்ளலாம் என தானமாக வழங்கியிருக்கிறார். மட்டுமின்றி இனி அந்த இடத்திற்கு தானோ தன் வாரிசுகளோ உரிமை கொண்டாட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்த இடம் அங்கு வந்துசெல்லும் மக்கள் தொழுவதற்கு நல்ல முறையில் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கேராளாவில் இயங்கி வரும் “மர்கஸூஸ் தக்காபஸூஸ் சுன்யா” என்ற எத்தீம் கானா அமைப்பு நிர்வாகிகள் உமர் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள். அங்கே நாங்கள் கடை கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை எங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என இவர்கள் கேட்க, அவர்களுக்காக அந்த கட்டிடத்தின் 3 மற்றும் 4வது தளங்களை முழுமையாக விட்டுக்கொடுத்து விட்டு டெல்லிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் உமர் அப்துல்லாஹ்.
இந்த நிலையில் கேரள அமைப்பினரால் அந்தக் கட்டிடத்திற்கு அல்-அல்ஹாஜ்.மன்சூர் என்பவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த கேரள அமைப்பினர் தொழுகை நடந்து வரும் இரண்டாவது தளத்தையும் அபகரிக்க நினைத்து மன்சூர் மூலமாக அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
எப்படியாவது இங்கே தொழுபவர்களை விரட்டியடித்து விட்டு இந்தப் பள்ளியை அபகரித்து யாருக்காவது விற்றுவிடலாம் என திட்டமிட்ட இந்த அல்ஹாஜி சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை சீனிவாசன் என்பவர் வர்ஷலட்சுமி என்ற பெயரில் வட்டிக்கடை நடத்துவதற்கு விற்று விட்டாராம். விற்றவருக்கு இடத்தை ஒப்படைப்பதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் பயன்படுத்தியிருக்கிறார் இந்த அல்ஹாஜி.
காரணம் பூக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக யாரும் தொழவர மாட்டார்கள் என நினைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப்பள்ளிக்குள் இருந்த பாய், குர்ஆன், தொழுகை விரிப்பு, தஸ்பீக் மணிகள் மற்றும் கடிகாரம் என அனைத்துப்பொருட்களையும் இரவோடு இரவாக மூட்டைக்கட்டி கீழே இருக்கும் சுரங்க அறையில் வைத்துப்பூட்டிவிட்டு பள்ளிவாசலுக்கு வேறு பூட்டு போட்டு பூட்டி சென்று விட்டார் இந்த அல்ஹாஜ். மறுநாள் மதியம் பள்ளிவாசல் பூட்டப்பட்ட செய்தி அறிந்த பொதுமக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு விசயத்தை அறிவித்தனர்.
உடனடியாக களமிறங்கிய தலைமை பூக்கடை கிளையைத் தொடர்பு கொண்டு இந்த விசயத்தை அனுகுமாறு அறிவித்தது. அத்தோடு தென்சென்னை வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் களத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். மேற்படி நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரோ அதை நான் சீனிவாசன் என்பவருக்கு விற்றுவிட்டேன் என கூலாகச் சொல்ல, திரண்டிருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பூட்டை உடைப்பது என முடிவு செய்து அந்தப் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்க்கும் போது அந்த இடம் பள்ளிவாசல் இருந்ததற்கு கொஞ்சம் கூட அடையாளம் இல்லாமல் மாறிப்போய் இருந்தது
உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்து பாய், குர்ஆன், தொழுகை விரிப்பு போன்ற பொருட்களை எடுத்துச் சென்று அங்கே வைத்து அதை மீண்டும் பள்ளிவாசலாக அமைத்தனர். அத்தோடு அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 3 சகோதரர்களை இரவு 9 மணிவரை பாதுகாப்புக்கு வைத்து விட்டு மற்றவர்கள் கலந்து சென்றனர். காவலுக்கு இருந்தவர்கள் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு கிளம்ப எத்தனித்து பள்ளியைப்பூட்டி அதன் சாவியை கீழே இருந்த கடையில் கொடுத்து விட்டுச்சென்று விட்டார்கள். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் 15 மேற்பட்ட குண்டர்களோடு அங்கே வந்த சீனிவாசன் குழு அதிரடியாக வெளியே இருந்த ஒழு செய்ய பயன்படும் கற்களை உடைத்து விட்டு மீண்டும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கே தொழுகை செய்வதற்கு இமாம் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபி வடிவத்தையும் உடைத்துப் பெயர்த்து எறிந்தது.
பின்னர் அங்கேயிருந்த பாய்கள் மற்றும் குர்ஆன் என அனைத்துப்பொருட்களையும் பழையபடி மூட்டை கட்டிப் போட்டிப்போட்டுவிட்டு அவர்களது வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் தகவல் உடனடியாக மீண்டும் நம் சகோதரர்களுக்கு தெரிய புயலென களமிறங்கிய கிளை மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அங்கே பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்களுடன் கடுமையான வாக்குவாதம் புரிய, இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தப்பகுதியில் குழும ஆரம்பித்தனர்.
உடனடியாக அங்கே வந்த காவல்துறையினர் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியதைத் தொடர்ந்து நம் சகோதரர்கள் அங்கே கரசேவையில் ஈடுபட்ட குண்டர்கள் மீது புகார் அளிக்க உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கை(FIR)
தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களின் எழுச்சியைக்கண்டு பயந்து பின்வாங்கிய சீனிவாசன், அந்த இடத்தை நான் அவர்களுக்கே திரும்பி விற்றுவிடுகிறேன் என அங்கேயே வாக்குறுதி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ். பள்ளியை மறுபடியும் இவர்களே விலைகொடுத்து வாங்குவதற்கான அனைத்துப்பணிகளும் நடந்து வருவதாக அந்தப்பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். பள்ளிவாசலுக்கு ஒரு பிரச்சனை என வந்துவிட்டால் உடனடியாக அங்கே களம் கண்டு முறியடிக்கும் செயலில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அங்கே குழுமியிருந்த மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

பெண்களே! படைப்பில் மாற்றம் செய்யும் பாவச் செயலை தவிர்ந்து கொள்ளுங்கள்.


பெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.
RASMIN  M.I.Sc

மனிதப் படைப்பில் மிக முக்கியமானவர்களாக ஆண்,பெண் என்ற இரண்டு சாராரை இறைவன் படைத்திருக்கிறான். படைக்கும் ஆற்றலை தனக்கு மாத்திரமே சொந்தமாக்கியிருக்கும் இறைவன் தனது படைப்பை மிகவும் அழகாகவும், நேரத்தியாகவும் உருவாக்கியிருக்கிறான்.

ஆனால் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்ட பெண்கள் இன்று தங்கள் காதுகளை துளையிட்டு அதிலே ஆபரணங்களை அணிகிறார்கள். இது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டதா? இது இன்று நமக்கு மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரை அறிஞர்கள் இரண்டு விதமான கருத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் காது, மூக்கை துளையிட்டு அதிலே ஆபரணங்கள் அணிவது தடையில்லை என்பது முதல் சாராரின் வாதமாகும்.

இரண்டாவது சாராரின் வாதம் பெண்கள் காதுகளிலோ, மூக்கிலோ துளையிட்டு எந்த ஆபரணங்களையும் அணியக்கூடாது.

இந்த இரண்டு சாராரின் கருத்துக்களில் எது சரியானது என்பதை நாம் ஆய்வு செய்து பார்த்தால் இரண்டாவது கருத்தான பெண்கள் தங்கள் உடம்பிpல் துளையிட்டு எந்த ஆபரணங்களையும் அணியக் கூடாது என்ற கருத்துத்தான் சரியானதாக அமைகிறது.

அதற்கான ஆதாரங்களையும், எதிர் வாதங்களையும் பார்ப்போம்.

இறைவனிடம், ஷைத்தானின் உரையாடல்.

إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا (117) لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا (118) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا النساء : 117 - 119

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்துவிட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன், அவர்களை வழி கெடுப்பேன், அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்.அவர்களுக்குக் கட்டளையிடுவேன், அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள்.(மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொருப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான இழப்பை அடைந்து விட்டான்.(4: 118,119)

மேற்கண்ட வசனத்தில் ஷைத்தான் மக்களை வழிகெடுக்கும் விதத்தைப் பற்றி சொல்லும் போது ஒரு முக்கியமான முறையைச் சொல்லிக் காட்டுகிறான்.

அதில் ஒரு முறையாக அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று இறைவனிடம் ஷைத்தான் சொல்லிக் காட்டுகிறான்.

இறைவன் நம்மை படைத்த கோலத்தையே மாற்றுவதற்கு ஷைத்தான் நம்மைத் தூண்டுவான் என்பது மேற்கண்ட வசனத்தில் நமக்குத் தெரிய வருகிறது.

படைப்பதில் வல்லவன் இறைவனே !

فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ  المؤمنون : 14

அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.(23:14)

படைப்பதிலேயே அழகாகப் படைப்பவன் அல்லாஹ்தான் என்று இறைவன் தன்னைப்பற்றி சொல்லிக் காட்டுகிறான்.

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا  الفرقان : 2

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது.அவன் பிள்ளைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தான் அதைத் திட்டமிட்டு அமைத்தான்.(25:2)

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ المؤمنون : 17

உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் படைத்துள்ளோம்.இப்படைப்பைப் பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை.(23:17)

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ القمر : 49

ஒவ்வொரு பொருளையும், கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.(54:49)

خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ الْمَصِيرُ التغابن : 3

வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான், உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.(64:3)

أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ الملك : 14

படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுற்பமானவன், நன்கறிந்தவன்.(67:14)

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ التين : 4

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(95:4)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இறைவன் தான் அழகிய படைப்பாளம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன. இவைன் தனது படைப்பில் ஆண் ஒருவன் எப்படி இருக்க வேண்டும், பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுப் படைத்திருக்கும் போது,பெண்கள் தங்கள் காதுகளை துளையிட்டுக் கொள்வது அவனுடைய படைப்பை குறை காண்பதாகும்.

இறைவனுக்கு சரியாகப் படைக்கத் தெரியவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்வதைப் போன்றதாகும்.

ஏன் என்றால் உலகில் உள்ள எந்த மனிதனும் தான் பிறக்கும் போது காதில் துளையுடன் பிறப்பதில்லை. அப்படிப் பிறக்காத போது நாமாக துளையை உண்டாக்குவது அதிகப் பிரசங்கித் தனமாகும்.

ஒருவருக்கு உடலியல் ரீதியாக ஒரு குறையிருந்து அதை அவர் சரி செய்தால் அது இறைவனின் படைப்பைக் குறை சொல்வதாக ஆகாது. உதாரணத்திற்கு எல்லா மனிதர்களுடைய பற்களும் சரியாக இருக்கும் போது ஒருவருடைய பற்கள் மாத்திரம் கொஞ்சம் நீட்டிக் கொண்டு நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது அவர் அந்த பற்களை மறுத்துவ ரீதியாக சரி செய்தால் அது இறைவனின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்தியதாக கருத முடியாது.

ஏன் என்றால் மனிதர்களின் பற்கள் எப்படி இருக்கிறது என்று இறைவன் பல கோடி மக்களின் பற்களின் மூலம் நமக்குக் காட்டியிருக்கிறான். இப்படியிருக்கும் போது ஒருவரின் பல் மாத்திரம் நீட்டிக்கொண்டிருந்தால் அது அவருடைய உடலியல் பிரச்சினை அதை சரி செய்வதை யாரும் குறை காண முடியாது.

ஆனால் உலகில் பிறக்கும் பெண்கள் தங்கள் காதுகளிலோ, மூக்கிலோ எந்தவிதமான துளையுமில்லாமல் பிறக்கும் போது நாம் அதில் துளையிடுவோமாயின் இறைவனுக்குத் தெரியாத ஒரு அழகிய படை கோலம் நமக்குத் தெரியும் என்ற மமதை அந்த இடத்தில் உருவாகிறது.

பெண்களுக்கு காதுகளில் அல்லது மூக்கில் துளை போடுவது அழகு என்றிருந்தால் படைக்கும் போதே  ஒரு துளையை வைத்துப் படைப்பதற்கு இறைவனுக்கு முடியாதா?

நபியின் சாபத்திற்கு உள்ளானவர்கள்.

நபியவர்கள் சிலரைப் பார்த்து சபிக்கும் போது இறைவனி படைப்பை மாற்றுபவர்களையும் சோத்து சபிக்கிறார்கள்.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ مَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي كِتَابِ اللَّهِ (خ : 5943)

அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத் தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே என்று சொன்னார்கள்.(புகாரி : 5943,5948)

அல்லாஹ் படைத்த படைப்பை விட அழகு என்று நினைத்துக் கொண்டு யாராவது மேலதிகமான உடம்பில் மாற்றம் ஏற்படுத்தினால் அது சாபத்திற்கு உரிய செயல் என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியில் இருந்தும் எந்தக் காரணம் கொண்டும் பெண்கள் காது, மூக்குகளில் துளையிடக் கூடாது என்பது தெளிவாகிறது.

எதிர் கேள்விகளும், நமது பதில்களும்.

முதலாவது வாதம் :

கத்னா (ஸ{ன்னத்) செய்வது உருவத்தை மாற்றுவதாக அமையாதா? 

நமது பதில் :

இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கிறது.ஒன்ற கத்னா செய்வதைப் பொருத்தவரையில் இறைவன் கத்னா செய்வதற்கு அவனுடைய நபியின் மூலம் நமக்குக் கட்டளை பிறப்பித்துள்ளான். நபியவர்களே கட்டளையிட்டதை நாம் செய்வது எப்படி உருவ மாற்றமாக அமையும்? அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இஸ்லாம் நமக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது.

இரண்டாவது கத்னா செய்பவர்கள் யாரும் அழகுக்காக கத்னா செய்வதில்லை. கருவரைக்குள் நாம் இருக்கும் காலம் வரை மர்ம உருப்பு மூடியிருப்பதுதான் குழந்தையின் உடலுக்கு நல்லது.

வெளியில் வந்தவுடன் அதை அகற்றுவதுதான் உடலுக்கு உகந்தது என்பது விஞ்ஞானமே இன்று ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் தான் அதனால் தான் அதனை நபியவர்களே அகற்றும் படி கட்டளையிட்டுள்ளார்கள் இது இறைவனின் படைப்பில் குறை காண்பதாக ஆகாது.

இரண்டாவது வாதம் :

நபியின் காலத்தில் பெண்களே தங்கள் காதணிகளைக் கலட்டிப் போட்டுள்ளார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.பெண்கள் காது குத்துவது ஹராம் என்றால் நபியின் காலத்தில் பெண்கள் அணிந்திருக்கிறார்கள் என்ற செய்திக்கு என்ன பதில்?

நமது பதில் :

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَيُّوبَ قَالَ سَمِعْتُ عَطَاءً قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَمَعَهُ بِلَالٌ فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ وَبِلَالٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (خ : 98)  

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.  அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள்.  அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளை யும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக் கிறேன்.(புகாரி : 98)

மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் பெருநாள் தினத்தில் கொடுத்த ஸதகாவைப் பற்றிப் பேசுகிறது. அதாவது ஸத்தகா கொடுக்கும் போது அந்தப் பெண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருந்த காதணிகளையும் எடுத்துப் போடுகிறார்கள்.
இந்தச் செய்தியில் பெண்கள் காதணிகளைப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற தகவல் உள்ளடங்கியிருக்கிறது. காதுகளில் துளையிட்டிருந்தால் தானே காதணி அணிந்திருக்க முடியும் இல்லாவிட்டால் எப்படி அணிவது என்ற கேள்வியை இதிலிருந்து முன்வைக்கிறார்கள்.

முதலில் காதுகளில் துளையிட்டால்தான் காதணி அணிய முடியும் என்பதில்லை காதுகளில் துளையிடாமலும் காதணி அணிய முடியும். காதுகளில் துளையிட்டுத்தான் நபியின் காலத்தில் பெண்கள் காதணிகளை அணிந்திருந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை வைத்து நாமும் காதுகளில் துளையிடலாம் என்ற வாதத்தை யாரும் முன் வைக்க முடியாது.

நபியவர்களின் முன்னிலையில் யாராவது ஒரு பெண்மணி தனது குழந்தையை அழைத்து வந்து நபியின் கண் முன்னால் காது குத்தி அதனை நபியவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் காது குத்துவதை நபியவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் மேலதிகமாக நமக்குத் தெரிய வரும் தகவல் என்னவெனில் காது குத்தக் கூடாது என்ற தகவல் தெரியாதவர்கள் இதற்க்கு முன் காது குத்தியிருந்தால் அதைத் தொடர முடியும், கலற்றிப் போடத்தேவையில்லை. என்பது மட்டும் தான் இதில் உள்ள மேலதிக தகவலாகும்.ஆக மொத்தத்தில் இறைவனின் படைப்பை மாற்ற முயலும் இந்தக் காரியத்தை யாரும் செய்யக் கூடாது. 

இதற்கு முன் யாராவது காது குத்தியிருந்தால் அவர்கள் அதனை தொடரலாம் என்பதே தெளிவான முடிவாகும்.

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா ! அல்ஹம்துலில்லாஹ்




நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். 

பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.

பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 21.03.11

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 21.03.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  தஸ்லிமா அவர்கள் “சோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஞாயிறு

தமிழகத்தைக் குஜராத் போல் மாற்ற வேண்டும் - இல‌.கணேசன்

"தேர்த‌லுக்குப் பின்பு த‌மிழ‌க‌த்தில் கூட்ட‌ணி மாற்ற‌ம் ஏற்ப‌டும்" என‌ நாக‌ர்கோவிலில் செய்தியாள‌ர்க‌ள் ச‌ந்திப்பின் போது பாஜக தலைவர் இல. கணேசன் கூறினார்.
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
"திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி கருத்து தெரிவித்து வருகிறார். ஆணையத்தின் கெடுபிடிகளைச் சாடுகிறார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் காரணமாக அப்பாவி மக்கள், வணிகர்கள் பாதிக்கப்படுவது உண்மையாக இருக்கலாம்.
இந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் கெடுபிடிகளுடன் இருக்க அவசியம் ஏற்பட்டது எதனால்?
இலவசங்கள் வழங்குவதன் மூலம் பாரத நாட்டில் சுயமரியாதை இழந்த மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பொருட்கள் வாங்கும் சக்தியையும், பொருளாதர நிலையையும் தான் மேம்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை ஏற்றுக்கொள்ளலாம்.
இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். இது தேர்தல் விதிமுறையை மீறியது ஆகாதா? தமிழகத்தில் அரசியல் சூழல் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. மே 13ந்தேதிக்குப் பிறகு திமுக, அதிமுகவுடனோ, கம்யூனிஸ்ட் காங்கிரசுடனோ கை கோர்க்காமல் வேறு கட்சிகள் யார்? யாருக்கு வேண்டுமானாலும் உதவ முன்வரலாம். காட்சிகள் மாறலாம். கம்யூனிஸ்ட் திமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம்.
காங்கிரஸ் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம். மே 13க்குப் பிறகு பீகார் மாநிலம் சந்திக்கும் குதிரை பேரங்கள் இங்கு நடக்கும். கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கும் பா.ஜனதா இந்தத் தேர்தலில் 6 சட்டமன்ற உறுப்பினர்களை குமரியில் இருந்து அனுப்பும். தமிழகத்தைக் குஜராத் போல் மாற்ற வேண்டும். பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து சுஷ்மா சுவராஜ், அகில இந்திய தலைவர் நிதின்கட்கரி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் தமிழகத்திற்குப் பிரச்சாரம் செய்ய வருகை தரவுள்ளனர்."
இவ்வாறு அவர் கூறினார்.

(குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்தது போல் தமிழகத்திலும் நடத்த  எண்ணியுள்ளோம் என்று கூறுகிறாரே ????? )

TNTJ வின் தேர்தல் நிலைபாடு விளக்கம் – 2011 (வீடியோ)


TNTJ வின் பொதுக்குழுவும் முதல்வர் சந்திப்பும் – தினத்தந்தி செய்தி


தினத்தந்தியில் இன்று (27-3-11) வெளியான செய்தி:
இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்.

சென்னை, மார்ச்.27-
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம். இடஒதுக்கீட்டை அதிகரிக்க இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
தி.மு.க. அறிவிப்பு
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.

திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.
இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.
பொதுக்குழுவும் அவசர செயற்குழுவும்:
மற்ற தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான அவசரமான தேர்தலாக மாறிப் போனது. இந்த அவசரத்தில் எப்படியாவது துண்டு போட்டு 3 சீட்டு பிடித்து விட வேண்டும் என்ற ரீதியில் இதே சிந்தனையாக, அந்த அமைப்பு சார்ந்த எந்த மக்களின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மற்ற அமைப்பினர்கள் தூது விட்டுக் காத்திருக்க, இந்த அவசரத்திலும் அசராமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் முடிவைக் கேட்டது.
அதாவது ஆளும் திமுக இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறா விட்டால் அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். திமுக இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுகவை ஆதரிப்பது என்ற செயல் திட்டத்தோடு சேலம் பொதுக்குழு நிறைவுபெற்றது.
ஆனால் ஆளும் திமுகவினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அதிமுகவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை திநகரில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது. செயற்குழு அறிவித்த அந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது.
அதாவது கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்ற நிலையில் இருந்தது அதிமுக தலைமை. ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அதிமுக இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.
அதிமுகவினர் ஏற்படுத்திய நம்பிக்கை:
செயற்குழு முடிந்தும் கூட திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள் அதிமுகவினர். தேர்தல் அறிக்கை பற்றி அவர்களிடத்திலே தொடர்ந்து கேட்கப்பட்டது. அதெல்லாம் கவலையே படாதீர்கள். உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது.
அதிமுகவின் துரோகமும் சமுதாயக்காவலர்களின் மௌனமும்:
இந்த நிலையில் திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக தலைவர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் அதில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாலது கண்டு கொதிப்படைந்தது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை. சாதரண துரோகத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இது பச்சை நம்பிக்கை துரோகம் என்ற ரீதியில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி இதை மக்கள் மன்றத்தில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அதிமுகவை ஆதரித்தவர்களும், அவர்களிடத்திலே சீட்டு வாங்கியவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நமக்கு கிடைத்த சீட்டு பறிபோய் விடும் என்ற நிலையில் வாய்மூடி மௌனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், பார்த்தீர்களா! ஜெயலலிதா திருச்சி கூட்டத்திலே இடஒதுக்கீடு குறித்து சொல்லிவிட்டார் என்ற ரீதியில் முழக்கமிடவும் துவங்கிவிட்டார்கள்.
தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்த செய்தி இல்லையென்றதும் பதறியடித்து கூட்டணியை விட்டே வெளியே வந்திருக்க வேண்டாமா? அல்லது இடஒதுக்கீடு குறித்த உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தால் போதும் நாங்கள் வெற்றிபெற்றால் போதும் என போகிற போக்கில் காற்றுவாக்கில் சொல்கிற கோரிக்கைகளுக்கு கொடிபிடித்து அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் வெறுப்பைத் தான் ஏற்படுத்துகிறது
மீண்டும் கூடிய அவசர பொதுக்குழு:
இந்த விசயத்தில் திருப்தியடையாத‌ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக‌ அவசர பொதுக்குழுவைக் கூட்டியது. செய்யவே மாட்டேன் என சொல்பவனும், வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் திமுகவினரின் இன்றைய நிலையும், அதிமுகவினர் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைப்பது என முடிவுசெய்யப்பட்டு இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து அதை இருமடங்காக்கி வழங்குவேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இடஒதுக்கீட்டு விசயத்தை மட்டும் தூக்கி தூர எறிந்தார்.
அதைப் பற்றி பேசுவதற்கோ கேட்பதற்கோ அம்மாவின் நவீன அடிமைகள் தயங்கும் போது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பணிய மாட்டோம், தேர்தல் நட்பு தேர்தல் முடியும் வரை மட்டும் தான். அடுத்த நாள் அவர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக களமிறங்குவோம், நமக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, நம் ஆதரவு தான் அவர்களுக்குத் தேவை என்ற ரீதியில் இன்று வரை இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரு கட்சியினர் செய்த துரோகங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது.
வாக்கெடுப்பும் மக்களின் தீர்ப்பும்:
இந்த இடத்தில் சமுதாயத்திற்கு அதிமுக செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன.
1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி ய்யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்
2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் திமிகவுக்கு ஆதரவு அளிப்பது
என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.
மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல.
ஆக சமுதாயத்தைக் காட்டி ஒன்று, இரண்டு, மூன்று அதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிடையாய்க் கிடக்கிறோம், நீங்கள் தான் சமுதாய காவலர், நாங்கள் காலங்காலமாக நீங்கள் சமுதாயத்திற்கு என்ன துரோகம் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம், எங்களுக்கு 3 தாருங்கள் நாங்கள் 300க்கு உழைப்போம் என அவர்களுக்கு கொடி தூக்குவதும், இவர்களை ஆதரிக்கும் போது அவர்களைத் திட்டுவதும், அவர்கள் பக்கம் ஓடிவிட்டால் இவர்களைத் திட்டுவதும் என மோடிமஸ்தான் வேலைகளைச் செய்து எப்படியாவது தங்களை சமுதாய காவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கும் சமுதாய துரோகிகளுக்கு மத்தியில் மக்கள் முடிவே அமைப்பின் முடிவு என்ற நிலையை மட்டும் கையாளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகின்றது. எல்லா புகழும் இறைவனுக்கே

சனி

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.



முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.
இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.
ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.
ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில் தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.
பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்போம் எனக் கூறி, வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது உட்பட நம்மிடத்தில் எழுதி வாங்கிச் சென்று விட்டு, நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவது என்று மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.
திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது

வெள்ளி

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்: ஜெ., அறிவிப்புதிருச்சி:

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 2ம் நாள் பிரசாரத்தை இன்று 25.03.11மாலை 5 மணிக்கு துவக்கிய ஜெயலலிதா, கருமண்டபம், தீரன் நகர், ராம்ஜி நகர் டோல்கேட், புங்கனூர் வழியாக மரவனூர் வரை பிரசாரம் செய்கிறார்.
                                           நன்றி். தினமலர் net.25.03.11

மரங்கொத்தியின் வடிவமைப்பு


மரங்தொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடாந்து மரத்தை துளையிட்ட போதிலும் அதற்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறோம். மரங்கொத்தியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறைவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் ஒரு மரங்கொத்தியால் 2-3 வினாடிகளில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும். ஆதன் மூலம் அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.

மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.

மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.

அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.

மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.

நன்றி : ஹாருன் யஹ்யா

இலவசம்! இலவசம்! இலவசம்!!

 
மகள் திருமணத்திற்கு 50000  மும் அறைசவரன் பவுனும் இலவசம்!!

அவள் கற்பிணியானால் ருபாய் 10000  இலவசம்!!

முதல் குழந்தைக்கு பட்டப்படிப்புவரை இலவசம்!!

 பள்ளி சீருடை காலணிகள் இலவசம்!

அவன் பள்ளிக்கு செல்ல சைக்கில் இலவசம்!

+1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசம்!

பஸ்ஸில் செல்ல பஸ் பாஸ் இலவசம்!

அன்றாட உணவிற்கு அரிசி இலவசம்!

அரிசி அரைக்க கிரைண்டர் இலவசம்!

குழம்பு வைக்க மிக்சி இலவசம்!

சமையல் செய்ய ஸ்டவ் இலவசம்!

சமையல் சிலிண்டரும் இலவசம்!

சமையல் முடிந்ததும் சீரியல் பார்க்க தொலைக்காட்சி இலவசம்!

அதற்கு கேபிள் இணைப்பும் இலவசம்!

மாலையில் டீ காப்பி குடிக்க பாலிற்காக மாடு இலவசம்!

வியர்க்காமல் தூங்க மின்விசிறி இலவசம்!
20  லிட்டர் (குடிதண்ணீ  தாங்க) தண்ணீர் இலவசம்!

வீடு இல்லாதவர்க்கு மணை இலவசம்!

மனையில் வீடு கட்ட ருபாய் 180000 லட்சம்  இலவசம்!

விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம்!

தண்ணீர் மோட்டார் இலவசம்!

செல்போன் இலவசம்!

பண்டிகை வந்தால் வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் இலவசம்! 

அவசர விபத்து என்றால் 108  ஆம்புலன்ஸ் இலவசம்!

அறுவது வயதை கடந்தால் பேருந்து கட்டணம் இலவசம்!

நோய்கள் என்றால் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை இலவசம்!

சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தால் ஈமச்சடங்கிற்கு உதவித்தொகை இலவசம்! 

இப்படி எல்லாமே இலவசம் அப்புறம் நான் எதுக்கு தேவையில்லாம உடம்ப வளைக்கனும்!  உழைக்கனும்!! 

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 13.03.11


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு  கடந்த 13.03.2011 அன்று நடைபெற்றது. இதில் “A.W.நாசர்” அவர்கள் “பாழாக்கப்படும் பஜர் தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 10.03.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  “சித்திக் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய்

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்

ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.
அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.
விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர். இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் கொலைமுயற்சியில் ஈடுபட்ட ரவுடிகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் கொள்கைவாதிகள் இப்போது தலைமறைவாகி விட்டனர்.
டி.என்.டி.ஜே நிர்வாகிகள் வெளியிட்ட அந்த நோட்டீஸில் ‘இவர்கள் முஸ்லிம் சகோதரன் என்று கூட பார்க்காமல் அடிப்பார்கள், தாக்குவார்கள். ஆனால் பாதிப்படைந்தவர் புகார் கொடுத்தால் அதை எதிர்கொள்ள திராணியின்றி தலைமறைவாகி விடுவர்’ என்று போடப்பட்டிருந்தது. அதை இவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இவர்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ‘சொந்த சகோதரனை கொல்ல துடிக்கும் இவர்கள் ரவுடிகக் கும்பல் தான் என்று உணர ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் பிற மாவட்டங்களில் முஸ்லிம்களை கொல்வதும் அடித்து உதைப்பதும் அராஜக செயல்கள் செய்வதும் குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் இவர்கள் முஸ்லிம்களுக்கு பகிரங்க எதிரிகள், இவர்கள் தீவிரவாதிகள் தான் என்பதை ஊருக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
குறிப்பு : கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சற்று தேறிவரும் அந்த இரண்டு சகோதரர்களுக்காக துஆ செய்யவும்.