தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்


கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் 27.02.11 அன்று மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகட்டுமானம் மற்றும் தாவா பற்றிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.

ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 26.02.11

26.02.11 அன்று ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக மஜ்துல் முபின் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் உரையாற்றினார்கள்இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சொற்பொழிவை  ஆர்வமுடன் கேட்டனர்.

ஞாயிறு

முன்னால் த.மு.மு.க, தலைமை கழக பேச்சாளரின் மனம் திறந்த மடல்!!

அனுப்புநர்
Puliangudi Seyad Ali  S.செய்யத அலி,
  முன்னாள் மாவட்ட செயலாளர், ம.ம.க.நெல்லை
  முன்னாள் த.மு.மு.க.தலைமை கழக பேச்சாளர்,
    புளியங்குடி.
    நெல்லை மாவட்டம்.
பெறுநர்
        மாவட்ட நிர்வாகிகள் / மாநில செயற்குழு உறுப்பினர்கள்,
        த.மு.மு.க. &  ம.ம.க.
        தமிழ்நாடு.

அன்புடையீர்!
        அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
        இம்மடல் உங்களை பூரண உடல் நலத்துடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக!
        எனது இக்கடிதத்தை திறந்த மனதுடன், விறுப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
        அன்புச் சகோதரர்களே! நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த நான் த.மு.மு.க.வில் 13 ஆண்டு காலம் பணியாற்றியவன்.  1994 ஆம் ஆண்டு எனது 14வது வயதில் தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசல்களில் அடி, உதைகளை வாங்கி பிரச்சார களத்தில் போராடி தூய இஸ்லாத்தை நிலைநாட்டிட போராடியவன்.  1997ல் சமுதாய போராளி டாக்டர்.பழநிபாபா அவர்களின் மறைவுக்குப் பின் த.மு.மு.க.வில் இணைந்தேன்.  1999ம் ஆண்டு முதல் கிளை ஃ நகரம் ஃ மாவட்டம் ஃ மாநிலம் என பல்வேறு பொறுப்புகளில் த.மு.மு.க.வில் பணியாற்றினேன்.
        கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கூலி எதையும் பெறாமல் முழுநேர பணியாளனாக, அல்லாஹ்விடத்தில் மட்டுமே நன்மையை எதிர்பார்த்து கழக பணியாற்றியவன்.  எனது உடல் பலவீனத்தையும் மறந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கழக வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டேன்.  இவற்றையெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தாங்கள் நன்றாக அறிவீர்கள்.
        பல்லாயிரம் சகோதரர்கள் கழக பொறுப்பிற்கு வந்தது முதல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, பிரதிபலனை எதிர்பாராமல் இரவு பகல் வேறுபாடின்றி தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை த.மு.மு.க. இயக்கம் வளர அயராது பாடுபட்டு ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும்,  காவல் துறையாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு ஜமாத்தார்களால் ஊர் நீக்கம், சொந்த குடும்பத்தார்கள் விரட்டி அடிப்பு, பிரச்சார களங்களில் மோதல், உயிர்பலி என்று பல்வேறு தியாகத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட இயக்கம் த.மு.மு.க. ஆனால் இந்த இயக்கம் இன்று தனிப்பட்ட இரண்டு நபர்களின் (ஜவாஹிருல்லாஹ்,  ஹைதர் அலி) சொத்தாக மாறிவிட்டது.  இவர்களின் ஜனநாயக விரோத, ஏதேச்சதிகாரத்தை கண்டித்து கருத்துரைக்கும் நிர்வாகிகள் மீது பொய் புகார்களை கூறி, எவ்வித விசாரணையும் இல்லாமல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் போக்கு இன்று வாடிக்கையாகிவிட்டது.  இந்நிலையில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளைக்கு சொந்தமான இடமானது எந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சொந்தமானது அல்ல.  அறக்கட்டளையின் சொத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டு என்னைத் தொடர்ந்து தலைமை நிர்வாகிகள் தொந்தரவு செய்ததுடன் கொடுக்க மறுத்ததால் குற்றச்சாட்டு கூறி நீக்கிவிடுவதாகவும் மிரட்டினார்கள்.
                இவர்களின் இச்செயல்களை கண்டு மன வேதனை அடைந்து  கொண்டு இருக்கும்போது, 26-01-2011 அன்றைய தேதியிட்ட என்னுடைய ஈமெயிலுக்கு த.மு.மு.க.  தலைவர் M.H..ஜவாஹிருல்லாஹ்விடம்  இருந்து என்னை நீக்கிவிட்டதாக மெயில் கடிதம் வந்தது.  கழகத்திற்காக பாடுபட்ட என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் O.U.ரஹ்மத்துல்லாஹ் விசாரணை செய்ததாக பொய்கூறி என்னை நீக்கி உள்ளார்கள்.
     
ஆனால் என்னுடைய 13 ஆண்டுகால அப்பழுக்கற்ற தூய பணிகளுக்கான அங்கீகாரமாக கடந்த 28-01-2011 அன்று வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற த.மு.மு.க. மாநில செயற்குழு அமைந்ததாகவே கருதுகிறேன்.  எனக்கு எதிராக எடுக்கப்பட்ட த.மு.மு.க தலைமை நிர்வாகக் குழுவின் ஒரு தலைபட்சமான, தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவை ரத்துசெய்திட வேண்டும் என வலியுறுத்தி பல மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள் செயற்குழுவில் நியாயக்குரல் எழுப்பி பலமணி நேரம் போராடியது எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.  த.மு.மு.க. தலைமை எவ்வித விசாரணையும் இன்றி பல கட்டங்களில் பல மாவட்ட நிர்வாகிகளை கேள்வி கணக்கில்லாமல் நீக்கம் செய்திடும் முடிவை எடுக்கும்போது, அவர்களுக்காக நியாய குரல் எழுப்பிட யாரும் முன்வராத நிலையில் எனக்காக தலைமையிடம் போராட ஆள் இருக்கின்றது என்பதை நினைத்திடும் போது கண்களில் கண்ணீர்! (அல்ஹம்துலில்லாஹ்)..
        ஆனால் அதே நேரத்தில் தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஆதரித்தும், மாநில செயற்குழுவின் அனலை தணிப்பதற்காகவும், எனக்காக வாதாடிய சகோதரர்களின் நியாய குரலை அடக்குவதற்காகவும் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என் மீது வேண்டுமென்றே அபாண்டமான, ஜீரணிக்க முடியாத பொருளாதார குற்றச்சாட்டை சுமத்தி என்னை அங்கு அசிங்கப்படுத்தி உள்ளார்.  எனது பெயரை களங்கப்படுத்தினால் மட்டுமே என்னை உங்களிடமிருந்து தனிமைப்படுத்த முடியும் என நினைத்து அக்காரியத்தை செய்துமுடித்துள்ளார்.
        இந்நேரத்தில், பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கூறிய புளியங்குடி பள்ளிவாசல் பணம் கையாடல், ஊழல் குற்றச்சாட்டு அபாண்டமானது என்பதை பிற செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தவும், எனக்காக வாதாடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நீதிக்காகத்தான் போராடி உள்ளோம் என்கிற மன ஆறதலை ஏற்படுத்துவதற்காகவுமே இக்கடிதத்தை உங்கள் அனைவருக்கும் எழுதுகின்றேன்.
        பிரச்சனையின் ஆரம்பத்துக்கு செல்வதற்கு முன்பாக சில ஆண்டுகள் பின்னோக்கி சென்று சில சம்பவங்களை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். 
சகோதரர்களே!
        இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாற்றமாக வாரிய பொறுப்பை ஏற்றவுடன் பதவிக்காக ஆட்சியாளருக்கு மாநில நிர்வாகிகள் ஜால்ரா போட ஆரம்பித்தவுடன் கழகத்தின் வீரியம் குறைய தொடங்கிவிட்டது.  கழகத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்கள் மாநிலம் முதல் கிளை கழகம் வரை தாங்கள் சார்ந்து இருக்கும் மஹல்லாக்களின் நன்மைக்காக உண்மையான காரணங்களுக்காக வாரிய தலைவர் ளு.ஹைதர் அலி அவர்களை சந்திக்கும்போது மாநில பொருளாளர் ழு.ரு.ரஹ்மத்துல்லா முதல் கிளை நிர்வாகிகள் வரை அவமானப்படுத்தப்பட்டார்கள்.  கழகத்திற்காக உழைத்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்.  ஆனால் செல்வந்தர்களும், வாரிய சொத்தை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களும் வாரிய தலைவர் ஹைதர் அலி அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்டனர்.
        பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை எவரையும் மதிக்காமல் அவர் செயல்பட்ட விதத்தையும் சகோ.கோவை செய்யது அவர்களின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் தன்னுடைய ஆற்றலால், தன் முயற்சியால் தமக்கு கிடைத்த பதவி என நினைத்துக் கொண்டு தான்தோன்றித்தனமாகவும், அகம்பாவமும், கர்வமும் தலைக்கேறிய நிலையில் உள்ளார் பொதுச் செயலாளர் ஹைதர் அலி எனக் கூறுவார்.    இவ்வாறு இருந்த அவரது செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் அன்றைக்கு நானும் ஒருவனாக இருந்தேன்.  வக்பு வாரியத்தில் இவரது தனிப்பட்ட செயல்பாடுகளில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டுமொத்த கழகமும் பதில் சொல்ல வேண்டி வந்தது.  இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது.  கட்சியை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, த.மு.மு.க. தலையீடே இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், கட்சியை கைப்பற்ற அவர் செய்த சதிவேலைகளை அம்பலப்படுத்தியதற்கு பின்பாக அவரிடமிருந்து கட்சி காப்பாற்றப்பட்டது.இதிலும் எம்முடைய பங்கு இருந்தது.
       பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ம.ம.க.வை அழிப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட பகிரங்கமான முயற்சிகளுக்கு எதிராக மாபெரும் கருத்துரவாக்கம் செய்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.  மேலும் நெல்லை மாவட்டத்தில் தனக்கு என அவர் உருவாக்கிய கோஷ்டி அரசியலுக்கு எதிரானவர்களோடு  நான் கைகோர்த்தது என இவைகள் அனைத்தும் என் மீது சகோ.ஹைதர் அலி அவர்களின் தீராத பகையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் நெல்லையில் அவர் உருவாக்கிய கோஷ்டியை சேர்ந்தவர்களின் பல மாத முயற்சிகளுக்குப் பின்னால் எனது ஊரில் எனக்கு எதிரான கோஷ்டி உருவாக்கப்பட்டது.  ஒரு சிலரை கையில் வைத்துக் கொண்டு பொய்யான காரணத்தை வைத்து பிரச்சனை செய்ய சொன்னார்கள்.  பிரச்சனையும் எழுந்தது.  10 ஆண்டுகாலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகுந்த ஒற்றுமையோடும், கட்டுக்கோப்போடும், சிறப்பான முறையில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நகர அமைப்பிற்கும் எடுத்துக் காட்டாக எனது ஊர் விளங்கியது.  எமது நகர அமைப்பை போன்று எவருமே செயல்பட முடியாத அளவுக்கு செயல் திட்டங்கள் பிரமிக்க வைக்க கூடியதாக இருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)
       த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் இதற்காக பலமுறை என்னை பாராட்டியுள்ளார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று உருவாக்கப்பட்ட இந்த கோஷ்டிகள் மூலமாக எனக்கு எதிரான அவதூறுகள் பலமாக பரப்பப்பட்டது.  சகோதரத்துவம், கூட்டமைப்பு சிதைக்கப்பட்டது.  சகோதரத்துவம் உடைந்தது.  கழக வளர்ச்சி கடந்த 6 மாதமாக பெரிதும் பாதிக்கப்பட்டது.  கழகம் புளியங்குடியில் 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டது.  இந்நிலைக்கு காரணமான கயவர்கள்.ஹைதர் அலி அவர்களின் நிழலில் ஒதுங்கினார்கள்.  நானோ, நெல்லை மாவட்ட நிர்வாகமோ, த.மு.மு.க. தலைமை நிர்வாகமோ ஒன்றுமே செய்ய முடியவில்லை.  கழக கட்டமைப்பையும், சகோதரத்துவத்தையும் உடைத்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட த.மு.மு.க. தலைமை நிர்வாக குழு தயங்கியது என்கிற நிலையை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
        இப்போது விசயத்துக்கு வருவோம்!  மாநில செயற்குழுவில் மதியம் 3 மணிக்கு பிறகு பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என் மீது சுமத்திய பள்ளிவாசல் பணம் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு இன்றைக்கு அல்ல.  மாறாக நான் த.மு.மு.க மாவட்ட பொருளாளராக இருக்கும் போது கடந்த 2010 ஜீலை மாதத்தில் எனது ஊரில் உள்ள ளு.ஹைதர் அலி அவர்களின் ஆலோசனையில் செயல்படும் கோஷ்டியினரால் பரப்பப்பட்டது.
        இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சென்னையில் த.மு.மு.க. தலைமையகத்தில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற்றது.  இவ்விசாரணையின் போது பேரா.ஜவாஹிருல்லாஹ் சகோ.ஹைதர் அலி, ம.ம.க.  P.அப்துல் சமது ஆகியோர்  உடனிருந்தனர்.
        விசாரணையில், நான் 1 ரூபாய் மோசடி செய்திருந்தாலும் நீக்கிவிடுவது என்கின்ற அதிதீவிர முடிவில் சகோ.ஹைதர் அலி அவர்கள் இருந்தார்கள்.  அல்லாஹ்வின் உதவி மட்டுமே அன்றைக்கு எனக்கு உதவியாக இருந்தது.  விசாரணையில் குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. (திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் வசூலிக்கப்பட்ட சில ஆயிரம் ரூபாய்க்கும் திருச்சி லால்குடியைச் சார்ந்த நுச.ஷர்புதீன் அவர்கள் மூலமாக சவுதி அரேபியாவின் குடிமகனாகிய அரபு சகோதரர் முகமது அல் பர்ராஜ் அவர்களது சொந்த பணம் ரூ.3 லட்சம் உள்ளிட்டவைகளுக்கும், O.U.R. கொடுத்த பணம் ரூ.5 ஆயிரமும் சேர்த்து கணக்கு காண்பிக்கப்பட்டது).  ஆனால் குற்றச்சாட்டை பரப்பிய அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.  இதனை கண்டித்து நான் வாடகை கட்டிட மர்கஸ் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கி கொள்வதாகவும் வேறு யாரையாவது வைத்து மர்கஸ் நிர்வாகம் பார்த்து கொள்ளுங்கள் என்று நானே கூறிவிட்டதாலும், வாடகை கட்டிடம் மர்க்ஸ்க்கு அமைப்புக் குழு நியமனம் செய்யப்பட்டது.  அதே நேரம் அந்த விசாரணை நடைபெற்ற இடத்தில் வைத்தே நான் கோரிக்கை வைத்தேன்.   மேற்படி அவதூறு பிரச்சாரம் தொடர்பான உண்மை நிலையை எமது ஊரில் உள்ள மக்களுக்கு மத்தியில் தலைமை தெளிவுபடுத்திட வேண்டும் என்பதுதான். எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன்படி விசாரணை முடித்த 2 நாள் கழித்து ஆகஸ்ட் 6 ம் தேதி வெள்ளிக்கிழமை எமது பள்ளிவாசலில் நடைபெற்ற ஜீம் ஆ உரையில் தென்காசி  மைதீன் சேட்கான் அவர்களின் மூலமாக விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.  'பள்ளிவாசல் பணத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.  எனவே அவதூறை நம்பாதீர்கள்!  ஒற்றுமையுடன் அல்லாஹ்வுக்காக செயல்படுங்கள'; என தென்காசி மைதீன் சேட்கான் அவர்கள் ஜீம்ஆ உரையாற்றி புளியங்குடியில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். (VIDEO ஆதாரம் உள்ளது) அதன்பின்பு 1 நாள் கழித்து ஆகஸ்ட் 8 ம் தேதி காலையில் நடைபெற்ற புளியங்குடி நகர த.மு.மு.க. பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ம.ம.க. P.அப்துல்சமது, த.மு.மு.க. ழு.ரு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  அவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி தலைமையில் நடைபெற்ற விசாரணையை குறிப்பிட்டு பேசினார்கள்.  ஆதாரம் எதுவும் இன்றி எவருடைய மானத்தோடும் விளையாடாதீர்கள்!என அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.
 
(குறிப்பு : இதே தினத்தன்று (ஆகஸ்ட் 8) தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற சகோ ஹைதர் அலி அவர்கள் வருகை தந்தார்கள்.  அப்பொதுக் கூட்டத்திற்கு ம.ம.க. P.அப்துல்சமது அவர்களும் கலந்துகொள்ள சென்றார்கள்.  அங்கு இரண்டு நாட்கள் தங்கினார்கள்.   ஆகஸ்ட் 8,9 ம் தேதிகளில் தென்காசியில் சகோ.ஹைதர் அலி அவர்களால் நெல்லை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கோஷ்டியின் அட்டகாசத்தை நேரில் கண்டார்கள்.  மாவட்ட நிர்வாகத்தை மதிக்காமல் நிழல் மாவட்ட நிர்வாகமாக அவர்கள் செயல்படுவதையும் அதற்கு ஹைதர் அலி அவர்கள் உரமிட்டு வளர்க்கிறார் என்பதையும் P.அப்துல் சமது அவர்கள் பார்த்துவிட்டு மனம் குமுறிக் கொண்டே மன வருத்தத்தோடு சென்னை சென்றார் என்பதை இங்கே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.)
 
இறுதியாக எனது நியாயமான கேள்விகள் என்னவென்றால்?

பள்ளிவாசல் பணம் தொடர்பாக நான் தவறு செய்திருந்தால். .. . ?

1)    ஆகஸ்ட் 4ம் தேதி விசாரணையின்போது நான் வகித்து வந்த த.மு.மு,க. மாவட்ட பொருளாளர் பொருப்பிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?
2)    ஆகஸ்ட்6 வெள்ளிக்கிழமை ஜீம்ஆ உரையில் அல்லாஹ்வின் பள்ளிவாசலில் வைத்து தென்காசி மைதீன் சேட்கான் அவர்கள் பொய் பேசினாரா?
3)    ஆகஸ்ட் 8 புளியங்குடி பொதுக்குழுவுக்கு வந்த P.அப்துல்சமது அவர்களும், மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் பொய் பேசினார்களா?
4)    ஆகஸ்ட் 4, 2010 முதல் 26-01-2011 வரை 6 மாத காலம் நெல்லை மாவட்ட நிர்வாகியாகவும், தலைமை கழக பேச்சாளராகவும் இருந்துள்ளேன்.  பள்ளிவாசல் பணத்தை மோசடி செய்த குற்றவாளியை ஏன் தண்டிக்காமல் விட்டிருந்தீர்கள்?
5)    டிசம்பர் 6, 2010 பாபர் மசூதி மீட்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திட சிவகங்கை மாவட்டத்திற்கு அனுப்பியது ஏன்?
6)    2011 ஜனவரி 25ம் தேதி வரையில் சகோ.ஹைதர் அலி அவர்களால் எனக்கு ஏற்படும் மன உளைச்சலை பற்றி நான் சந்திக்கும் அனைத்து தலைமை நிர்வாகிகளிடமும் புகார் தெரிவிக்கும் போது, ஹைதர் அலியின் கோரத் தாண்டவம் அதிகமாக உள்ளது.  கழகம் உடையும்  சூழ்நிலை உள்ளது எனவே பொறுமையாக இரு. பொறுத்துக் கொள் எனக் கூறியதோடு, மாநிலப் பொதுக்குழுவுக்குப் பின்னர், ஹைதர் அலி போய்விடுவார் எனவும், எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியது எல்லாம் நாடகமா?  அல்லது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் ஈனச் செயலா?
மிக மிக முக்கியமான கேள்வி
 
7)    கடந்த 14-11-2010 அன்று சகோ ஹைதர் அலி அவர்களை சந்தித்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடமும், சில நாட்கள் கழித்து சந்தித்த தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடத்திலும், இன்னும் பல பேர்களிடமும், என்மீது வேண்டுமென்றே அவதூறுகளை அவர் பரப்பினார்.  எந்த விசாரணையும் இன்றி, வேண்டுமென்றே பல கேவலமான அவதூறுகளை என் மீது சுமத்தினார்.  அந்நேரத்திலும் பள்ளிவாசல் பணம் மோசடி செய்தவன் என குற்றம் சாட்டினார்.  இதனை கேள்விப்பட்டவுடன் நான் நேரடியாக கோவைக்கு சென்று, அங்குள்ள நிர்வாகிகளிடம் உண்மை நிலவரத்தை கூறிவிட்டு, ளு.ஹைதர் அலி உண்மையாளராக இருந்தால் நிரூபிக்கட்டும்! என்ன தண்டனை வேண்டுமானாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என கூறிவிட்டு வந்தேன்.  ஆனால் இதுநாள் வரை நிரூபிக்கப்படவில்லை.
8)    கடந்த 23-11-2010 அன்று தலைமையகத்தில் நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவுக்கு முதல் நாள் 22ம் தேதி நிர்வாகக் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.   அக்கடிதத்தில் சகோ.ஹைதர் அலி அவர்கள் என்மீது சுமத்தும் மோசமான அவதூறை விசாரியுங்கள்.  பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்! குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் ஹைதர் அலி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியிருந்தேன்.  அதற்கும் எந்த விசாரணையும் இல்லை.
9)    அடுத்து, அதே கருத்தை வலியுறுத்தி 'எனது உயிரை விட எனது மானம் முக்கியம்' எனவே ஹைதர் அலி கூறிய குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என கடந்த 31-12-2010 அன்று தலைமை நிர்வாக குழுவுக்கு மறுபடியும் நினைவூட்டல் கடிதம் எழுதினேன்.  அதற்கும் பதில் இல்லை. என்ன கொடுமை பார்த்தீங்களா?       
10)    கடந்த ஜனவரி 26 ம் தேதியிட்ட ஒரு கடிதம் (இமெயில்) மூலமாக பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மூலமாக எனக்கு கிடைத்தது.  அக்கடிதத்தில் எவ்வித விசாரணையும் இன்றி, தான்தோன்றித்தனமாக பொய்யான 4 காரணங்களை கூறி 13 ஆண்டுகாலம் உழைத்த உண்மை தொண்டனை எவ்வித ஆதாரமுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.  அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதற்காக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூறியிருக்கும் 4 காரணங்களும் எவ்வளவு அபத்தமானது என்பதை அக்கடிதத்தை படிக்கும் அனைவரும் நன்றாக அறிவார்கள்.  இருப்பினும் அக்கடிதத்திலேயே 5வது காரணமாக பள்ளிவாசல் பணம் மோசடியில் ஈடுபட்ட காரணத்தினாலும் எனக்கூறி நீக்கம் செய்திருக்க வேண்டியது தானே?  ஏன் செய்யவில்லை?
11)    என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள என் மீது பாசம் கொண்ட த.மு.மு.க. நிர்வாகிகள் தலைமை கழகத்தில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டபோதும்,  வெளிமாவட்ட நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சொல்லாத காரணத்தை தலைமை நிர்வாகிகள் செயற்குழுவில் சொன்ன காரணம் என்ன?
12)    எனது விவகாரமாக தலைமை நிர்வாகிகளிடம் சண்டையிட்ட முக்கியமான ஒரு நபரிடம் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், அவரை 3 மாதம் பொறுத்துக் கொள்ள சொல்லுங்கள் இப்போது நிலைமை சரியில்லை, அவரை பொறுமையாக இருக்கச் சொல் என கூறியதன் காரணம் என்ன?
13)  செயற்குழுவுக்கு 10 நாட்களுக்கு முன்பே ஹைதர் அலி TORTURE பொறுக்க முடியாமல் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததை ஏற்க மறுத்து பொதுக்குழு முடியட்டும்  ஹைதர் அலி சென்று விடுவார் என்று கூறியதன் காரணம் என்ன?
 எனவே சகோதரர்களே! . . . .                       
ஜனவரி 28 ந் தேதி காலை 11 மணிக்கு பிறகு நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து கொண்டு தலைமை நிர்வாகிகள் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி) ஆகியோரின் கம்பெனியாக த.மு.மு.க. மாறிவிட்டது.  கருத்துச் சுதந்திரம் இல்லை என நான் நெல்லை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதற்கு பின்பாக நான் திருடனாகிவிட்டேன்.  என்ன கொடுமை இது! பாருங்கள்! இந்த அநியாயத்தை நியாயக் குரல் எழுப்பி மாநில செயற்குழுவில் பேசிய அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல இறைவனிடம் 'துஆ' செய்கின்றேன்.  நீங்கள் நீதிக்காகவே போராடியுள்ளீர்கள்.  'திருடனுக்கு பரிந்து பேசவில்லை.  அநீதி இழைக்கப்பட்ட, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி ஜீவனுக்காகவே வாதாடியுள்ளீர்;கள்.  (அல்ஹம்துலில்லாஹ்) எனவே நீங்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.
        என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு தலைமைநிர்வாக்குழு கூறியுள்ள முதல் காரணம், கழக பொதுச்செயலாளர் ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும், பொதுஇடத்தில்                                                                                                                                                                                                     பேசியதுதானே சகோதரர்களே!


        சகோ.ஹைதர் அலி அவர்களை நான் தரக்குறைவாகவும், இழிவாகவும் எவனிடத்தில் பேசினேன்? பேசியது தொடர்பாக என்னை ஏன் விசாரணை செய்யவில்லை.  விசாரிக்காமலேயே 13 ஆண்டுகாலம் உழைத்தவனை அடிப்படை உறுப்பினர் பொருப்பிலிருந்து நீக்கம் செய்திடும் அதிகாரத்தை தலைமை நிர்வாக குழுவுக்கு யார் கொடுத்தது? இப்படி விசாரிக்காமலேயே யாரை வேண்டுமானாலும் நீக்கம் செய்யலாம் என்கிற உரிமையை செயற்குழு பொதுக்குழு இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதா?

        தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களே!  எல்லாம் சிலகாலம் தான்.  இதேநிலை உங்களில் எவருக்கும் வரலாம்.  அல்லாஹ்வை மறந்து ஆட்டம்  போடாதீர்கள்!

        சரி!  நான் கேட்கிறேன்!

சகோ.ஹைதர் அலி அவர்கள், பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை பலநேரங்களில் பொதுஇடத்தில் தரம் தாழ்த்தி விமர்சித்திருக்கிறார்களே!
அவருக்கு என்ன தண்டனை?

    மௌலவி J.S.ரிபாயி, தமிமுன்அன்சாரி, P.அப்துல் சமது ஆகியோரைப்பற்றியும், என்னைப்பற்றியும் தரம் தாழ்ந்து ஹைதர் அலி அவர்கள் கடுமையாக பலரிடத்தில் விமர்சித்திருக்கிறாரே?  அதற்கு என்ன தண்டனை?

சகோ.ஹைதர் அலி அவர்களை வாரிய பொறுப்பு ஏற்ற நாள்முதல் இன்றுவரை கடுமையாகவும், மிக, மிக இழிவாகவும், கேவலப்படுத்தி, என்னிடத்திலும், என்னைப் போல் பலரிடத்திலும் பேசியுள்ள கோவை செய்யது மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

        மிகச் சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகியிடத்திலும், என்னிடத்திலும் பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை மிக, மிக கொச்சைப்படுத்தி கேவலமாக விமர்சனம் செய்த கோவை செய்யது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

சரி, . . .

    நான் ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாக விமர்சித்தேன் என்பதை ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும் நான் மட்டுமா அவரை பேசினேன்?

       ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாகவும், மிக, மிக கேவலமாகவும், இன்னும் ' உளவுத் துறையின் கைக்கூலி' என்றெல்லாம் விமர்சித்தவர்கள் தலைமை நிர்வாக குழுவில் அங்கம்வகிக்கும் மாநில நிர்வாகிகள் தானே?

  அவர்களுக்கு என்ன  தண்டனை  சகோதரர்களே!

        என்னுடைய 13 ஆண்டுகால உழைப்பினாலும், வளர்க்கப்பட்ட  அமைப்பு என்பதால் பல ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்து வருகின்றேன்.  மாநில நிர்வாகிகள், என் மீது எல்லை மீறும்போது நானும் எல்லை மீறுவேன் என்பதை இப்போதைக்கு சொல்லி           வைக்கின்றேன்.

           என் அன்பு சகோதரர்களே!  நான் இப்போது நீங்கள் அங்கம் வகிக்கும் இயக்கத்தில் இல்லை.  எனது இரத்தத்தை உறிஞ்சிய, எனது இளமையை அபகரித்துவிட்டு, 13 ஆண்டுகால எனது இயக்கப் பணியையும் பயன்படுத்திக் கொண்டு இன்று என் மீது அவதூறு பரப்பும் தலைமை நிர்வாகிகள் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி) மீது நிச்சயம் மறுமையில் வல்ல இறைவனிடம் வழக்கு தொடருவேன்.  எனது உடல் பலவீனத்தையும் மறந்து இரவு பகல் பாராமல் உழைத்;த உண்மைத் தொண்டனை விசாரணை எதுவும் இன்றி அநியாயமாக பழிபோடும் அனைத்து தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களும் அல்லாஹ்விடம் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.

        என் அன்பு சகோதரர்களே!  நான் இப்போது உங்களுக்கு அறவே பிடிக்காத ஒரு இயக்கத்தில் சேர்ந்துவிட்ட ஆத்திரத்தில் இருப்பீர்;கள்.  இருப்பினும் உங்களுடன் 13 ஆண்டுகாலம் பணியாற்றியவன் என்கிற முறையில் ஒரே ஒரு கோரிக்கை மட்டும்வைக்கின்றேன்.

சகோதரர்களே!  தன்னுடைய சுயநலத்திற்காக சகோ.ஹைதர் அலி அவர்களோடு என்னைப்போல பலரையும் பகடை காயாக்கி, மோதச் செய்துவிட்டு இன்றைக்கு எதிர்வரும் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்காக ளு.ஹைதர் அலி அவர்களோடு நேசக்கரம் நீட்டுவதற்கு உண்மையை குழிதோண்டி புதைத்துவிட்டு என்னைப் போல் பலரையும் அவமானப்பட செய்த பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் வார்த்தை ஜாலத்தையும், கபட நாடகத்தையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.  தான் நினைக்கும் காரியம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலிகடாவாக்க தயங்கவே மாட்டார் பேரா.ஜவாஹிருல்லாஹ்.  தான் நினைத்தால் சகோ.ஹைதர் அலி அவர்களுடன் கூட்டு!  நினைக்கவில்லை என்றால் வேட்டு! என்ன கொடுமை பாருங்கள்! மாநில நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதவி சுகத்திற்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணிபவர்களாகவே உள்ளனர். இப்போதைக்கு அவர்களுக்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்த திருப்தியில் உள்ளனர்.  தேர்தலுக்கு பின் மோதல் ஆரம்பமாகும்.  என்னைப்போல் பலர் அப்போது அவர்களுக்கு தேவைப்படும்!  நிச்சயம் என்னைப் போல் ஏமாளிகள் ஜவாஹிருல்லாஹ்,P.அப்துல் சமதுவுக்கு கிடைப்பார்கள்.


எனவே தூய உள்ளங்களே!  அன்பு மாவட்ட நிர்வாகிகளே!  மாநில செயற்குழு உறுப்பினர்களே! நம்பிவிடாதீர்கள், மோசம் போய்விடாதீர்கள்!  என்பதை மட்டும் அறிவுரையாக இல்லாமல், கோரிக்கையாக பாசத்துடன் உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  எனவே தலைமையை மாற்ற முயற்சியுங்கள்!

 எதையும் தீர விசாரியுங்கள்!  ஆய்வு செய்யுங்கள்!  கேள்விப்படுவதை எல்லாம் நம்பி விடாதீர்கள்.  எல்லாம் வல்ல இறைவன் நாம் ஆற்றும் அனைத்து நற்பணிகளுக்கும் உயரிய கூலி வழங்கிட போதுமானவன்.  மறுமையில் இறைவனின் கடும் பிடியிலிருந்து தப்பிக்க உண்மை மட்டும் பேசுவோம்!

                  வஸ்ஸலாம்.

                                           இப்படிக்கு,
                                   (S.செய்யது அலி)
                      முன்னாள் மாவட்ட செயலாளர்,
                            மனித நேய மக்கள் கட்சி,
                             நெல்லை மாவட்டம்,
                    முன்னாள் தலைமை கழக பேச்சாளர்.
     முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாள

மமகவுக்கு பல்லக்கு தூக்கும் மாமா(மாசற்ற(?) மாணிக்கங்கள்

சமுதாயத்தின் மானம் காக்கப் போகிறோம் என சொல்லி நன்றாக கவனிக்கவும் சமுதாயத்தின் மானம் காக்கப்போகிறோம் என்று மட்டும் சொல்லி தமிழக அரசியலில் எங்களின் பிரதிநிதித்துவத்தை அடைந்தே தீரூவோம் என்ற ஒரே நோக்கத்திற்காக கவனிக்கவும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மனித நேயமிக்க மக்கள் கட்சி இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களுக்கு தன் தொண்டர்களை அடகுவைத்து சமுதாயத்தினர் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் என‌ பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவது அறிந்த ஒரு செய்திதான். சாதாரணமாக முஸ்லீம்லீக்தேசியலீக் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் சாதாரணமாக பெற்றுவந்த 5 சீட்டுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு மற்ற ஒரு மூன்றாவது நபரை வெற்றியடைய வைப்பதற்காக முக்கியமாக தாங்கள் மட்டும் எப்படியாவது எம்மெல்லே ஆகிவிடவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக வந்த வரை லாபம் என மூன்று சீட்டுக்களை எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி மற்ற கட்சிகள் சாதாரணமாக நடத்தும் இழுபறி பேச்சுவார்த்தைகள் கூட இல்லாமல் எனக்கு ஒன்னு உனக்கு ஒன்னு என்ற ரீதியில் 3 சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இஸ்லாமிய மானத்தை காத்தில் பறக்கவிட்டு பல் தெறிக்க சிரிக்கிறார் பேராச்சிரியர்.

 

 

இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக சமுதாயத்தை அடகு வைத்து 3 சீட்டு வாங்கி வந்திருக்கும் வைகைப் புயல்களை ஊரே காரித்துப்பினாலும் அவர்களுக்கு சாமரம் வீசும் மன்னன் ஜமாத் மட்டும் அவர்களுக்கு ஆதரவாக பச்சை கொடி பிடித்து இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அதிலும் மன்னன் ஜமாத் அவர்களுக்கு ஆதரவாக வைக்கும் வாதத்தை நினைக்கும் போது சிரிப்பாகத்தான் வருகிறது. அதாவது வைகோ "கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35தொகுதிகள் பெற்றாராம். இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6தொகுதிகள் பெறவேண்டுமாம். ஆனால் 2009நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளைத் தான் பெற்றாராம். அப்படியாயின் மதிமுக மானமிழந்து விட்டதா? என அற்புதமான‌ வாதத்தை வைத்திருக்கிறார் மன்னன் ஜமாத்தின் அடிப்பொடி ஒருவர்.

அற்புதமான‌ வாதத்தை வைத்திருக்கிறார் மன்னன் ஜமாத்தின் அடிப்பொடி ஒருவர்.

 

நாம் அவர்களிடம் கேட்கிற கேள்வி! ஏம்பா! உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையாகொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லையாவைகோவும் சரி,காங்கிரஸூம் சரிஅவர்கள் யாரும் சமுதாய மானம் காக்க போகிறேன் என புறப்படவில்லை. அவர்கள் அவர்களின் கட்சிகளுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகள். அதுமட்டுமில்லாமல் வைகோ 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வைகோ 35 தொகுதிகளை ஏற்றுக்கொண்டார் ,அதேபோல 2009தேர்தலில் 4 தொகுதிகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் சமுதாய மானம் காக்க வீறுகொண்டு எழுந்த வெற்றி வீரர்கள் ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டார்களாஇல்லையே! ஒரு தொகுதி கலாச்சாரத்தை ஒழிக்கத்தானய்யா அவர்கள் புயலென புறப்பட்டார்கள். கருணாநிதியால் இழிவுபடுத்தப்பட்டு கடைசியாக 4 தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார்கள் . அந்தக் கணக்குப்படி அதாவது நீங்கள் எடுத்து வைக்கும் வைகோவின் தியரிப்படி 35 க்கு6 என்ற வீதம் வரும். ஆனால் அவரோ 4 ஐப் பெற்றுக்கொண்டார். அதாவது நாடாளுமன்ற வீதம் 24 க்கு 4 வரும்

அந்த மாதிரி இன்றைக்கு நீங்கள் சத்தமில்லாமல் சாமரம் வீசும் மேற்படி சமுதாய தலைவர்கள் 4 கணக்குக்கு 4 X 6= 24 பெற்றிருக்க வேண்டும். அல்லது நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் வைகோ தியரிப்படி 2 X 6=12ஆவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட்டால் போதும் என்ற வேகத்தில் வெறும் 3சீட்டுக்களை வாங்கி வந்து வந்திருக்கிறார். அதை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவங்களுக்கு இப்படி மாப்பிள்ளை விசிறி வீசுறீங்களே! நியாயமாஇப்ப நாங்க ஏதாவது புதுப்பாயிண்ட வச்சமாநீங்க சொல்லியிருக்கிற மொக்கைப் பாயிண்டில் இருந்து தான் வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எப்படியாவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைத் தாக்கவும்பிஜேவை தாக்கவும் யார் தயாராக வந்தாலும் அவர்களுக்கு வால்பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வோம் என்ற கொள்கையில் இருந்தால் இப்படித்தான் சில நேரங்களில் சிந்தனை பல்பு எரியாது.



'மமகவை மண்ணைக் கவ்வ வைப்போம்என்று சமுதாய உணவோடு(அது சமுதாய உணவு இல்லை. உணர்வு..ஸ்பெல்லிங் மிஸ்டேக்)சொல்லக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணைக் கவ்வ வைப்போம் என்று 'மனுநீதி'யையும் தாண்டிய வெறியோடு தீர்மானம் போடும் இவர்களுக்குமமக மூன்று சீட்டு வாங்கினால் என்ன?முப்பது சீட்டு வாங்கினால் என்ன? என்று என்று கேட்கும் சிந்தனையை அடகுவைத்து விட்ட சகோதர்களே!! ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்து மானங்கெட்டுப் போய் மதியிழந்து நிற்கும் அவர்களைத் தட்டிக்கேட்க எங்களுக்கு மட்டுமல்ல! சமுதாயத்தின் ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கஅவர்களிடம் லாபம் எதிர்பார்த்து நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு நிற்பவர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.
 

''தமது கட்சி வேட்பாளர்களில் 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கே ஆதரவுஎன்று கூட்டணி 'டிமான்ட்வைக்கத் தயாராஇவ்வாறு செய்தால் நீங்கள் இடஒதுக்கீடு பெறாமலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை சட்டமன்றத்தில் ஏற்படுத்தி விடலாமே!
சே! என்ன ஒரு வாதம்! கொள்கை தான் இல்ல அட்லீஸ்ட் நிர்வாக அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும் என எதிர்பார்த்தோம். முதலில் ஒருவனுக்கு கொடுக்கும் சக்தி இருந்தால் தான் அவனிடம் சென்று கேட்பவன் அதைப் பெற முடியும். பிச்சை போடவே வழியில்லாதவன்கிட்ட போயி பிரியாணி வாங்கிக்கேட்ட கதயா இருக்குது மன்னன் ஜமாத்தின் வாதம். காலங்காலமாக இஸ்லாமியர்களுக்கு வாரியமும் போர்வையும் போர்த்தி வந்த அரசியல்வாதிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் சீரிய போராட்டங்களினால் (பழைய போராட்டங்கள் உள்பட) நொந்து போய் இனிமேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என அள்ளிப்போடாமல் கொஞ்சமாக கிள்ளிப்போட்டிருக்கிறார்கள் . மெதுவாகத்தானே வாங்க முடியும். இதுக்கு துப்பு இல்லாமத் தானே நீங்க டெல்லிக்கு சலோ! டெல்லிக்கு சலோ! என்ற ரீதியில் போனீங்க. இதப்பத்தி கேக்க உங்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?
மேற்கண்டவை எங்கள் கருத்து அல்ல. ததஜவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கனிமொழி எம்.பி அவர்களின் மூலமாக ததஜ நிர்வாகிகளை அழைத்து எப்படி கேட்கிறீர்கள் இட ஒதுக்கீடு எனக்கேட்டுததஜ நிர்வாகிகள் தந்த திட்டத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு 3.5% வழங்கப்பட்டது. இப்பட்டியே படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கிடைக்கும் என தமுமுகவினரை அன்றைக்கு எதிர்த்து தென்சென்னை சார்பாக ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் உங்கள் தலைவர் பாக்கர் பேசியது தான்.
இட ஒதுக்கீட்டுக்கே இப்படி என்றால் அப்ப நீங்க கேட்ட கேள்விக்கு?ஆக நீங்கள் வைக்கும் முட்டாள் தனமான வாதத்திற்கு உங்கள் தலைவரே அன்றைக்கு பதில் கொடுத்து விட்டார். ஓசியிலே இண்டெர் நெட் கிடைக்கிறது என்பதற்காக உக்காந்து உக்காந்து யோசிச்சி இப்படி கந்தலான கழுசடை வாதங்களை எழுதி வாங்கிக்கட்டிக் கொள்வதற்கு பதிலாக வேறு ஏதாவது நல்ல வேலை செய்யலாமே!
    

    

சனி

சாரமேடு கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “புறக்கணிக்கப்படும் இறை வசனமும், புகுத்தப்படும் பித்அத்தும்  ” என்ற தலைப்பில் உரையாற்றினார். உதில் ஏராளமான மாணவரகள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

lகோவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு

சமுதாய கோரிக்கையை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு  5% இடஒதுக்கீடு  தரும் கூட்டணிக்கே ஆதரவு என்று TNTJ அறிவித்த பொதுக்குழு முடிவை ஆதரிக்கிறோம்.
சமூக சிந்தனையுடன், சமுதாய முன்னேற்றத்துக்காக TNTJ எடுக்கும் மார்க்க மற்றும் அரசியல் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரிப்போம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு

 
கோவை மாவட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தங்களின் தேர்தல் நிலைபாட்டினை விளக்கும் விதமாக வைக்கப்பட்டு உள்ள பேனர்(FLEX

கோவை ஆசாத் நகர் கிளையில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 22.02.2011 அன்று தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 22.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்தி கொண்டு பயன் பெற்றனர்.

கூட்டு துஆ என்றால் என்ன?

ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது.சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆ.சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள்.குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ.நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம்.  கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும், ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம்.வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக  இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி )
நூல்: முஸ்லிம் (3541)
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட லில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு(பித்அத்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )
நூல்: முஸ்லிம் (1573)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)
கூட்டு துஆவுக்கு ஆதாரம் உள்ளதா ?
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களாஎன்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுல்  வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ஹதீஸ் எண் 1014
மேற்கண்ட வசனத்தில் மழை வேண்டி தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார்.ஆகவே இந்த நபிமொழி மழை வேண்டி துஆ கேட்பதற்கு மட்டும்தான் பொருந்தும்.ஆனால் சஹாபாக்கள் இந்த துஆவுக்கு ஆமீன் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கூட்டு துஆவுக்கு ஆதாரம் ஆகாது.
ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்என தபரானி, இப்னு அஸாகிர், ஹாகிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது.ஆனால் இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.
சூரா யூனூஸ் 89ம் வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரையும் பார்த்து உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதுஎனக் கூறுகின்றான். ஆனால் அதற்கு முந்திய வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் மாத்திரம்தான் அல்லாஹ்விடம்  பிரார்த்திக்கின்றார்கள். எனவே, மேற்படி சந்தர்ப்த்தில் மூஸா (அலை) அவர்கள் பிரார்த்திக்க துஆ ஓத ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள் எனக் இமாம் பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான் எனும் நூலில் இடம்பெறும் அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் இன்னொரு ஆதாரம்.
எனினும் மேற்படி செய்தியை அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஸர்பீ பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர். அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என அறிவிப்பாளர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு துஆவிர்க்கு எதிரான ஆதாரங்கள்
அல்லாஹ் தன் திருமறையில் , துஆ எப்படி கேட்க வேண்டும் என்று நமக்கு தெளிவாக கற்றுத் தருகிறான்.
உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர் ஆன் 7:205)
அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)
நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்குஎன்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)
உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால் நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!என்று கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4838)
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55               சப்தமிட்டு ஒருவர் துஆ கேட்டு அதற்க்கு சப்தமாக ஆமீன் கூறுதல் நிச்சயமாக ரகசியமானதாக இருக்க முடியாது.இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.கூட்டு துஆ தமிழ் மக்களிடையே 99% அரபு மொழியிலேயே கேட்கப் பட்டு வருகிறது.அதில் 99% பேருக்கு அரபி தெரியாது.நாம் எந்த துஆவிற்க்கு ஆமீன் கூருகிறோமோ அதற்க்கு நமக்கே அர்த்தம் தெரிய வில்லை என்றால், எதற்காக நாம் துஆ கேட்க வேண்டும்? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்னொரு அவலத்தையும் கேளுங்கள் , யார் அந்த துஆவை சப்தமிட்டு அரபு மொழியில் மொழிகிராரோ அவருக்கே கூட அவர் என்ன துஆ செய்கிறார் என்று தெரியாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது .இப்படி அர்த்தம் புரியாமல் துஆ கேட்பதிலும் அதற்க்கு ஆமீன் கூறுவதிலும் என்ன பணிவு இருக்க முடியும்.
பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)
அல்லாஹ் நம்மை ஆசொயோடு பிரார்த்தனை செய்யக் கட்டளையிடுகிறான்.பல பேர் கூடு துஆவில் தூங்கிக் கொண்டு ஆமீன் சொல்வதை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.ஆகவே அல்லாஹ் குறிப்பிட்ட பணிவும் இதில் இல்லை ரகசியமும் இல்லை ஆசையும் இல்லை .
.நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்" என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ மூஸா அஷ்அரீ(ரலி)
புகாரி 2992, 4205,6384,6409,6610,7386 முஸ்லிம்  4873
இந்த ஹதீஸ் திக்ருகளை பற்றி கூறப பட்டாலும்,அல்லாஹ் காது கேட்காதவன் இல்லை,அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.ஆகவே கூட்டு துஆ என்பது நிச்சயமாக ஒரு வழிகேடு,ஆகவே கூடு துஆவை நாம் புறக்கணிக்க வேண்டும்.
கூட்டு துஆவில் உள்ள பாதிப்பு
கூட்டு துஆவை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்து இருக்கிறார்கள் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தோம்.அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாததை செயல்படுத்தும் போதுதான் பல பாதிப்புகள் ஏற்படும்.கூட்டு துவாவில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்னவென்றால் , கூட்டு துஆவில் கலந்து கொள்பவர், தான் தனியாக துஆ கேட்க தேவையில்லை என்று எண்ணுகிறார்.தன்னுடைய சொந்த தேவைகளை அவரவர் கேட்க முடியாத நிலைமை இங்கே ஏற்படுகிறது.துஆ கேட்பவருக்கு குழந்தை இல்லாமல் இருந்து ஆமீன் கூருபவர் , இனி தனக்கு குழந்தையே வேண்டாம் என்ற நிலையில் இருந்து ,துஆ கேட்பவர் தனக்கு குழந்தை வேண்டி துஆ செய்தால் சரியாக இருக்காது. நிச்சயமாக ஒருவருடைய தேவையை மற்றவர் அறிந்திருக்க மாட்டார்.அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா தேவைகளையும் என்னிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2:188)
தொழுகையில் தாமதமாக சேர்ந்தவர்கள் கூட்டு துஆவினால் ஒழுங்காக தொழ முடியாத நிலையும் ஏற்படுகிறது.இரேண்டாவது ஜமாத் அமைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.குர்ஆன் வசனங்கள் ஒதப் படும் போது நாம் அதை செவிமடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 7:204)
இப்படி இருக்க இரேண்டாவது ஜமாத்தில் குர்ஆன் வசனங்கள் ஓதப் படும்போது கூட்டு துஆவும் நடந்துக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.

மேலும் பர்லு தொழுகைக்கு பின் இமாமை கொண்டே  துஆ கேட்டு பழகிவிட்டதால் ஒரு சிலர் தமது  சொந்த விஷயங்கள், 3,7,40 ஆம் பாத்திஹா ,பெயர் வைப்பு , திருமணம் போன்றவற்றிற்கும் பயணம் செல்லும்போதும் , ,விருந்து ஆரம்பம் முடிவிலும்,மட்டுமல்லாது  ,நோன்பு,ஹஜ் போன்ற கடமையை செய்ய தொடங்கும்போதும்கூட  இமாமே நேரில் வந்து கூட்டு துஆ என்னும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தராத ஒரு பித் அத்தை செய்து நமக்கு துஆ செய்ய வாய்ப்பளிக்காமல் செய்து விடுகிறார் , நீங்கள் நன்கு சிந்தித்து பார்த்தால் இந்த வழிகேடுகள்  அனைத்திற்கும் ஆரம்பம் எது என்று புரிந்துகொள்வீர்கள்
கூட்டு துஆ (சில )இமாம்களுக்கு வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகவே இருப்பதால் அதை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் எனவே இந்த பித் அதை தவிர்த்து நேரடியாக உள்ளச்சத்துடன்  இறைவனிடம் துஆ செய்து வருவதே நபி (ஸல்) காட்டி தந்த வழிமுறையாகும்.
விழிப்புணர்வு 
கூட்டு துஆவிர்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கூட்டு துஆவினால் ஏற்படும் விளைவுகளையும் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் கூட்டு துஆ ஒரு தெளிவான பித்அத் , நிச்சயமாக இது நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு செயலாக இருக்கிறது என்பதை இந்த தவறான செயலை செய்யக் கூடிய மக்களிடம் எச்சரிக்கை ஊட்ட வேண்டும்.