தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்–

தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக நேற்று(19.09.2011) கண்டன முழக்க போராட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்றது.





கோவை மாவட்டத்தில் ஆத்துப்பாலம் மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டன. இந்த இரண்டு வார்டுகளையும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.மேலும் இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவதற்காகவும் தான் தமிழக அரசு இந்த போக்கை கையாண்டு வருகிறது. எனவே அரசின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக நேற்று(19.08.2011) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் முன்னிலை வகித்தனர்.
இந்த போரட்டத்தின் செய்தியை தினசரி நாளிதழ்களான Times of India என்ற ஆங்கில நாளிதழிலும், தினத்தந்தி, தினகரன் தினமலர் மற்றும் செய்தி ஊடகங்களான சன் நியூஸ், புதிய தலைமுறை உள்ளிட்ட ஏராளமான சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்து உள்ளது….

  Time of India