தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வீடு இழந்தோரின் குடும்பத்திற்கு ரூ5000 நிதியுதவி

கோவை மாவட்டம் உக்கடம் பைப்பாஸ் சாலையிலுள்ள குளக்கரையில் ஏழை,எளிய மக்கள் சிலர் குளக்கரையோரத்தில் வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர். அதில் ஒருவடைய வீடு திடீரென குளத்திற்குள் இடிந்து விழுந்துவிட்டது. அவர்கள் வீடு இல்லாமல் தவித்தனர்.  தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையை  தொடர்பு கொண்டு திடீரென ஏற்பட்ட இழப்பால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.என்னுடைய கணவர் விபத்தால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் ஒரு கை குழந்தையுடன் மேலும் கர்ப்பிணியாகவும்  உள்ளேன் என்று கூறியதோடு நாங்கள் வேறு எங்கும் சென்று உதவி கேட்க விரும்பவில்லை  தங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளோம் என கூறினர். உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்  ஆசாத்நகர் கிளையின் சார்பாக  வாடகை வீடு அட்வான்ஸ் தொகைகாக  5000ரூபாய்  அவர்களுக்கு வழங்கப்பட்டது.