தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கோட்டை கிளையின் சார்பாக 07.08.2011 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு மார்க்க கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இதில் பல்வேறு அறிவுபூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் சில,
* திருமணத்தில் இரட்டை விருந்து கூடுமா?

* சஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

* மார்க்க கடமையை செய்ய கணவன் அனுமதி மறுத்தால் மனைவியின் நிலை?

* மரணித்த முஹம்மத் நபியை விட மரணிக்காத இயேசு(ஈசா நபி) உயர்ந்தவரா?
என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் வளைகுடா வாழ் மக்களுக்காக http://tntjcovai.com இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோட்டை கிளையின் சார்பாக இப்தார் விருந்தும் ஏற்பாடு செய்யபட்டது இருந்தது.