தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

நெல்லையில் நடந்த TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு

கடந்த 11-12-2011 அன்று நெல்லை பார்வதி மஹாலில் TNTJ மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழு தலைவர் சகோ.ஷம்சுல் லுஹா அவர்களின் ’தவ்ஹீத் குடும்பம்’ என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தணிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைலா திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!.