தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

மாத கால பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீ ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்…

நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பகுதியில் சென்று எந்த அளவிற்கு வீரியமாக பிரச்சாரக் களத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வரக்கூடிய மூன்று மாதங்களில் கவனித்து அந்தந்த பிரச்சாரகர்கள் இருக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகள் அவர்களுக்கு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பேச்சாளர்கள் என்ற அடையாள அட்டையை மாநிலநிர்வாகம் வழங்கும் என்று அறிவிப்பு செய்தார்.
அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பிரச்சாரகர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பிரச்சாரகர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்.
பொதுப்படையாக நாம் அனைவரும் தவறுகளிலிருந்து தவிர்ந்து வாழவேண்டும் என்று இருந்தபோதிலும், பிரச்சாரகர்களாக இருக்கக்கூடிய நாம், நமது இந்த தூய ஏகத்துவ பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான பாவங்களிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து வாழவேண்டும் எனவும், பெண்கள் தொடர்பான விஷயங்களிலும், பொருளாதரம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நமது ஜமாஅத்தின் இன்னபிற பிரச்சாரகர்கள் எந்த அளவிற்கு கவனமாகவும், பேணுதலாகவும் இருக்கின்றார்களோ அதைப்போல நீங்களும் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும், பிரச்சாரகர்கள் நேரந் தவறாமையை கடைபிடிப்பது அழைப்பு பணியின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் காலத்தின் கட்டாயம் கருதி மிகுந்த பொருட்செலவோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு தங்களது பங்களிப்பை பொருளாதார ரீதியாக பெருமளவு செய்த வெளிநாடு வாழ் மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாக தங்களது பங்களிப்பை செய்த மாவட்ட நிர்வாகிகளுக்கும், கிளை நிர்வாகிகளுக்கும், தனிநபராக இருந்து பொருளாதார பங்களிப்பை செய்தவர்களுக்கும், நல்ல முறையில் பாடங்களை நடத்திய ஆசிரியர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய மாநில நிர்வாகிகளுக்கும், தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்லமுறையில் வழங்கிய அனைவருக்கும் நன்றிகூறி முடிக்க, ஒரு மாத பிரச்சாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!