தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

படுத்த படுக்கையில் ஒரு பகவான்?..

இந்துக்களால் பகவான் என்றழைக்கப்படும் புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு உடல் நலமில்லை என்ற செய்திகள் வந்துள்ளன.

கடந்த 28 மார்ச் அன்று இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறப்பு டாக்டர் குழு ஒன்று பெங்களூரிலிருந்து புட்டபர்த்தி விரைந்துள்ளது.

ஆந்திர பிரதேச அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஸ் தலைமையிலான இந்தக் குழு பகவானுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

மனிதர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரை நாடுகின்றனர்.  
பகவானுக்கு உடல் நலம் குன்றினாலும் மருத்துவரைத்தான் நாடுகின்றனர் என்பது இங்கே கவனிக்கதக்கது.

இந்நிலையில் இவர் உடல்நலம் தேறிட ஏராளமான இந்து சகோதரர்கள் பகவானைப் பிராத்தித்து வருவதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.  இவர்கள் பிராத்திப்பது வேறொரு பகவானையா அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் பகவான் புட்டபர்த்தி சாய்பாபாவையா என்பது என்னைப் போன்ற பாமரர்களுக்கு விளங்கவில்லை.

பெங்களூரிலிருந்து...
நன்றி: உணர்வு