தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஈமானின் முழு சுவையையும் கொண்டுள்ள மூன்று தன்மைகள் என்னென்ன?

மூன்று தன்மைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்றால் ஈமானின் முழு சுவையும் நம்மிடம் உள்ளதாக அர்த்தமாகும்!.

அந்த மூன்று தன்மைகள் என்னென்ன?

1 . இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விடவும் அல்லாஹ்வையும்  அவனது தூதரையும்  நம் நேசத்திற்க்குரியவர்களாக  நாம் கருதுவது.
2 . எந்த நபரையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நாம் நேசிப்பது
3 . நெருப்பில் வீசப்படுவதை நாம் எவ்வாறு
வெறுப்போமோ, எவ்வாறு அஞ்சி நடுங்குவோமோ, அதே போன்று இணை வைத்தலில்  
     ஈடுபடுவதை குறித்தும் அஞ்சுவது.

நூல் : திர்மிதி 254