பயணுள்ள கற்பனை!! நாளை நிஜமாகும் கற்பனை!!
உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இதயத்தை சற்றுதிறந்து வைத்துக் கொள்ளுங்கள் ...
இப்போது கற்பனையில் உங்கள் முன்னால் ...
உங்களைச்சுற்றி உங்கள் ரத்த சொந்தங்கள், நேற்றுவரை அவர்ககோடு உரையாடிக்கொண்டு இருந்த உங்கள் வாய் இன்று திறக்க மறுக்கிறது, புன்ன்கைக்ககூட முடியவில்லை, உங்கள் குழந்தைகளையும் மனைவியும் ஆரத்தழுவிய கைகள், அவர்கள் அனைவரும் அருகே இருந்தும் செயளிழத்து கிடக்கிறது, அழுகை சதம் கண்நீர்களந்த முகங்கள், நான்குபேர் வந்து தூக்கிசெல்கிறார்கள் நீங்கள் குளிக்கவைக்கப்படுகிரீர்கள், உயிரோடு இருக்கும்பொழுது நம் உடல் எப்பொழுது கப்ருக்கு போகும் என்பதை தெரியாமல் இன்னும் எவ்ளோவோ காலம் பாக்கி இருக்கின்றது என்று சொன்ன நம் மனசாட்சி, குளிப்பாட்டி முடித்தவுடன் அதிகபட்சம் போனால் இன்னும் அரைமணிநேரம் என்று சொன்னதும் மனம் படபடக்கிறது
ஜனாஸா, நான்கு பேர் நான்கு மூலைகளையும் சுமந்தவண்ணம் உங்களை நெருங்கி வருகின்றனர்.
தொழுகையை நிறைவேற்றுவதற்காக அனைவரும் அணிவகுத்து நிற்கின்றனர்..
நான்கு தக்பீர்கள் சொல்லப்படுகின்றன. கடைசி த்தக்பீருடன் தொழுகை முடிகின்றது.
இப்போது உங்கள் மனதில் ஒரு நெருடல் ...
ஆசைப்பட்டு உங்களை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது.
மாடிக்கட்டடங்கள் கட்டுவதற்காக ஹஜ் போகாது சேர்த்த உங்கள் பணம் பிரயோசனமற்றதாகிவிட்டது.
தொழும் நேரங்களை மறந்த்து நீங்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் வீணாகிவிட்டது..
உங்கள் ஆடம்பரவாகனங்கள்,
குழந்தைச் செல்வங்கள்,
அன்புமனைவி ... எல்லாமே முடிந்துவிட்டது.
இப்போது உங்களுக்காக எஞ்சி இருப்பது நீங்கள் உடுத்தி இருக்கும் உங்கள் கFபன் பிடவைமட்டுமே!
உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை சுமந்து உங்கள் நிரந்ததர வீட்டில் வைத்துவிட்டார்கள்.
ஒரு பிடி மண் உங்கள் மேல் விழுகிறது.
உலகமே இடிந்து விழுந்துவிட்டது போல் உணர்கிறீர்கள்.
கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது.
இந்தநிமிடம் .... காரிருளில் நீங்கள் மட்டுமாக
தனித்துவிடப்பட்டுவிட்டீர்கள் ...
எல்லோரும் நடந்துசொல்லும் நிலமட்டத்திற்கு கீழால் ஆரடி நிலத்தில் நீங்கள் மட்டும் ...
நீங்கள் மட்டும் தனித்துவிடப்பட்டுவிட்டீர்கள்.
காசோ பணமோ,
குழந்தைகளோ, மனைவியோ இல்லாததனிமை ...
குறந்தபட்சம் ஓர்கையடக்கத் தொலைபேசியாவது, இல்லாததனிமை ...
இரண்டு மலக்குமார் உங்களை நோக்கிவந்து கொண்டிருக்கிறார்கள் ...
இப்போது நீங்கள் என்ன ? பதில் கூறத்தயாராகி இருக்கின்றீர்கள் ...
அந்த நிமிடத்தை கொஞ்சம் கற்பனையில் கொண்டுவந்து, (இந்தக்கேள்விகளை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் ...)
நான் உண்மையான ஒருமுஃமீனா ???
குரானின் ஒளியில் வாழ்கிறேனா ?? தொழுகையை விடாது தொழுகிறேனா ??
வருடம் ஒரு முறை வரும் ரமலானில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேனா ??
கடமையான ஹஜ்ஜை உரியமுறையில் நிறைவேற்றுகின்றேனா ?
போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு ஆம் என்ற விடையை தைரியமாக கூறப்போகின்றீர்களா ?
இல்லை ...
காலத்தை வீணாகக் கடத்திவிட்டேனே ...
ஒரு முறையாவாது அல்லஹ்வின் திருப்பொருத்தத்திற்காக ஹஜ் செய்திருக்கலாமே,
500/= நோட்டுக்களை விளம்பரத்துடன் கொடுத்ததற்குப்பதிலாக, யாருக்கும் தெரியாமல் நன்மைகளை கொள்ளை அடித்திருக்களாமே..
என் நோயை சாட்டுவைத்து நோன்புகளை விட்டுவிட்டேனே, கொஞ்சம் மனச்சாட்சிக்கு பொருத்தமாக நடந்து கொண்டிருக்களாமே..
வட்டி எடுக்காமல் லாபமோ நட்டமோ வியாபாரத்தையே முழுமனதாக செய்திருக்களாமே..
குரான் கூறிய ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே
அன்னிய ஆடவர்களின் முன்னால் என் அழங்காரத்தை மறைத்து கணவனுக்கு மட்டும் காட்டி இருக்கலாமே ...
குழந்தைகளை சிறந்தமுறையில் வளர்த்திருக்கலாமே..
தொலைக்காட்சியின் முன்மண்டியிட்டதற்குப்பதிலாக சுஜூதில் இறைவனை நெருங்கி இருக்கலாமே..
தொலைபேசியில் அரட்டை அடித்ததற்குப்பதிலாக குரானுடன் உரையாடி இருக்களாமே, இல்லைஏதாவதுபயனுள்ளபுத்த்கத்தைவாசித்துஇருக்களாமே..
என கைசேதப்படப் போகின்றீர்களா??????
சிந்தியுங்கள்!!
உலக வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இடமல்ல.. காத்திருந்தாலும் இழந்தால் மீண்டும் கிடைப்பதில்லை. இம்மை என்பது ஒரு பயணம் தாமதிக்காமல் எம்மை மறுமையின் வாசலில்கொண்டு சேர்த்திடும்.. அந்தப் பயணத்தில் கண் மூடித்தனமாய் காலத்தை கழிக்காமல் திட்டமிட்டு எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையேல்.. எம்வாழ்வும் இவ்விறைவாக்குகளின்பிரதிபளிப்பாகிவிடும்.
நஊதுபில்லாஹிமின்ஹா !