தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

பொன்னாடை போர்த்தும் தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் (?) அமைப்பு (சாக்)

நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக் சானல் என்ற கேபிள் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ் ஃபிர்தௌஸி.

சமீபத்தில் பெரியார் தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இஸ்லாமிக் சானல் சார்பாக நாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு பொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.

டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக் பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி, ஃபிர்தெஸியா கல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர் பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------------- என்ற ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்க டிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக் கொண்டு ஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்து கொண்டார். இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்கு அவர் பொன்னாடை போர்த்தி இருப்பார். ஒரு சிறுமியிடம் அந்த ஆடை கொடுக்கப்பட்டது. 

மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும் பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி

ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி

இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை

ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமையாளர் 


ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டுதானிருந்தனர்.

அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர்ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள்.