தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!

குழந்தைகளை பெற்றோர் அடிப்பது எத் தகைய ஆபத்தை அளிக்கும் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. பாட சாலைகளிலும், வீடுகளிலும் குழந்தைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர் அடிப்பது முற் றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய குடும்ப வன்முறை பலவீனமான குழந்தைகள் மீது பெற்றோரால் நடத்தப்படு வது மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்கின்றன ஆய்வுகள். மூத் தோர் இளையோரை அடிப்பது சரியே எனும் வன்முறைக் கலாச்சாரம் மிக எளிதில் குழந் தைகள் மனதில் விதைக்கப்படுகிறது. அத னால் அவர்கள் தமது தம்பி,தங்கைகளை அடிக்க துவங்குகின்றனர். பாடசாலைகளில் மற்ற குழந்தைகளை அடிக்கின்றனர்.
நோர்வே,ஸ்வீடன்,ஆஸ்திரியா,டென்மார்க் போன்ற நாடுகளில் பெற்றோர் குழந்தை களை அடிப்பது சட்டப்படி குற்றம்.இந்த நாடுகளில் பாடசாலை மாணவர்கள் வன் முறையில் ஈடுபடுவது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது. எத்தனைக் கெத்தனை அதிகமாக குழந்தைகள் அடிக்கப் படுகின்றனரோ அந்தளவுக்கு அவர்கள் வன்முறையாளர்களாக பிற்காலத்தில் மாறும் அபாயம் இருக்கிறது.
"அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?" என்று கேட்கலாம். தனியே உட்கார வைப்பது, பிடித்த உணவை செய்து கொடுக்க மறுப்பது, புத்திமதி சொல்வது, குழந்தைகளுடன் நட்புடன் பழகுவது, வெளியே விளையாடக் கூட்டிபோவதை அந்த நாளுக்கு தவிர்ப்பது என பல வழி முறைகள் இருக்கின்றன. குழந்தைகளிடம் நட்புறவை வளர்த்து காரியம் சாதிக்க தெரியாத பெற்றோர்கள் தமது கடமையில் தவறியவர்களாக ஆகின்றனர் என்பது தான் உண்மை. பல சமயங்களில் குழந்தைகள் என்னென்ன காரணங்களுக்காக பெற்றோ ரால் தாக்கப்படுகின்றனர் என்பது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கும். குழந்தைகளை அடிப்பது பெரும்பாலும் பெற்றோரின் அந்த நிமிட கோபத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கி றது என்பதால் தான் பெற்றோர் குழந்தை களை அடிக்கின்றனர்.தாய் குழந்தையை அடிப்பது; பெரும்பாலும் கணவன், மாமி யார் மேல் இருக்கும் கோபத்தில்தான்.. அவர் களை எதிர்த்து பேசமுடியாத ஆத்திரத்தில் குழந்தையை போட்டு அடிக்கிறாள்.
மிகவும் அற்ப காரணங்களுக்காக (பெரிய வர்களுக்கு மரியாதை தரவில்லை, எதிர்த்துப் பேசுவது) போன்ற காரணங்களுக்காக குழந் தைகள் தாக்கப்படுவர். குழந்தைகள் மரியா தையை கற்பது பெரியவர்களிடமிருந்துதான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பெற் றோர் தமது சொந்த கருத்தை குழந்தைகள் மீது இப்படி அடி-உதை மூலம் திணிப்பது குழந்தைகளின் சுயசிந்தனைக்கு தடையாக அமைந்துவிடுகிறது.குறும்பு செய்யும் குழந் தைகள் மிகவும் ஆக்கத்திறன் மிக்க குழந்தை களாக பிற்காலத்தில் வளருவார்கள். அடி உதை எனும் வன்முறைகள் அந்த ஆக்கத் திறனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடும்.
"என் அப்பா என்னை அடித்து வளர்த் தார். நான் நன்றாகத்தான் இருக்கிறேன்" என்பவர்கள்; தாங்கள் யார் யார் மீது அதே வன்முறையை செலுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பெரும்பாலும் தந்தையால் அடிக்கப்படு வர்கள் மனைவி, தம்பி, தங்கை, குழந்தை ஆகியோர் மீது அதே போன்ற உடலியல் அல்லது உளவியல் ரீதியான வன்முறையை பிரயோகித்திருப்பர். (விதிவிலக்குகள் இருக் கலாம்) அடிக்கு பதில் கடுமையான திட்டுக் களை பிரயோகிக்கலாம் எனவும் நினைக்கக் கூடாது.
குழந்தைகள் மனதில் ஆறமுடியாத ரணத்தை ஏற்படுத்துவதில் உளவியல் வன் முறையும் அடங்குகிறது. கட்டுப்பாடு என்பது முக்கியம். ஆனால் அதை வன்முறை யின் மூலம் மட்டுமே கொண்டுவர முடியும் என்று நினைப்பது தவறான வழிமுறையா கும்.