தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக பிடி ஆணை-arrest warrant

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை (arresst warrant)பிறப்பித்துள்ளது.


அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

எனவே, அவர்களுக்கு எதிராகப் பிடி ஆணைப் பிறப்பித்து (arrest warrant) நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.