தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

இஸ்லாமிய வங்கி முறை குறித்து கருத்தரங்கு

போபால்  :உலக பொருளாதார பிரச்சனை மற்றும் இஸ்லாமிய வங்கி முறை குறித்த கருத்தரங்கு வருகின்ற ஞாயறு அன்று மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற உள்ளது.இந்த கருத்தரங்கு முஸ்லிம் கல்வி சமூகம் மற்றும் கலாசார கழகமும் அரபி மற்றும் ஆங்கில கல்வி தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

இந்த கருத்தரங்கில் பிரபல ஷரியா ஆலோசகர் இர்பான் ஷாஹித் மற்றும் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் பொது செயலாளர் மெளன வலி ரஹ்மானியும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர். பேராசிரியர் ஷாஹித் அவர்கள் ஐரோப்பாவில் உள்ள பல மேலாண்மைக் கல்லூரிகளுக்கு  வருகைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. ஷாஹித் அவர்கள் பொருளியல் சார்ந்த நிறைய நூல்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என முஸ்லிம் கல்வி சமூகம் மற்றும் கலாசார கழகம், அரபி மற்றும் ஆங்கில கல்வி தொண்டு நிறுவனத்தின் போபால் செயலாளர் பர்வேஸ் பாரி தெரிவித்துள்ளார்.
thanks:-thoothuonline.com