தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

கல்வியைத் தேடி...


மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது.மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன.உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம்உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது..
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன'' (அல்குர்ஆன் 3:190)

அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள்.வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். 'எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 3:191)

அல்லாஹ்வை நினைப்பவர்கள் வானங்கள்-பூமி மற்றும் இரவு-பகல் மாறி மாறி வருவது போன்றவற்றில் உள்ள சான்றுகளைச் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனம் கூறுகின்றது. ஆன்மீகத்தை மட்டும் இறைவன் கூறவில்லை உலக விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறான் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது...

நபிகளார் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அது நபிகளாரின் மகன் இப்ராஹீம் இறந்த காரணத்தால்தான் ஏற்பட்டது என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகளார் இந்த மூடநம்பிக்கையை உடைத்து ஒருவரது பிறப்பிற்காகவோ அல்லது மறைவுக்காகவோ கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவை இரண்டும் இறைவனின் அத்தாட்சிகள் என்று கூறினார்கள்.

 இதுபோன்று இஸ்லாத்தை ஏற்றிருப்பவர்கள் சிந்தனை உள்ளவர்களாகவும், விவரமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பல இடங்களில் திருக்குர்ஆன் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தத் திருக்குர்ஆனை வேதமாகப் பெற்ற முஸ்லிம்கள்தான் இன்று பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்களாகவும், மூடநம்பிக்கை நிறைந்தவர்களாகவும் உள்ளனர்.

இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம். வறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பைத் தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம்.

உலகக் கல்வியைப் படிக்கும் நம் குழந்தைகள் உலகக் கல்வியிலேயே மூழ்கி படைத்தவனை மறந்து, மார்க்கத்திற்கு முரணாக நடக்கும் நிலைக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும். படிக்கும் நமது குழந்தைகள் தினமும் ஐவேளைத் தொழுகையைப் பேணுபவர்களாகவும், திருக்குர்ஆன், நபிமொழிகளைப் படிப்பவர்களாகவும், இஸ்லாத்தின் ஏனைய ஒழுங்குகளைப் பேணுபவர்களாகவும் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

(இறை)இல்லங்கள் உயர்த்தப்படவும் அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும் உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24: 36,37)

 நற்கல்வியைத் தேடுவோம். அதன் மூலம் நாமும் பயன் பெற்று, மக்களுக்கும் பயன் பெறச்செய்து, மார்க்கக் கடமைகளையும் முழுமையாகப் பேணி சொர்க்கத்தைப் பெறுவோம்.

 யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5231)

கல்விக்காக அரசு உதவிகள்!


தமிழக முஸ்லிம் மாணவ மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசும், மாநில அரசும் பலகோடி ரூபாய்கள் ஒதுக்குகின்றன. அதற்காக மாநிலத்திலும் மத்தியிலும் பல்வேறு நிறுனங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அரசு ஒதுக்கும் பணங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு வந்து சேருவதில்லை. முஸ்லிம் மாணவர்களின் விழிப்புணர்வின்மை, அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, அரசு அலுவலகங்களில் காணப்படும் லஞ்சம் மற்றும் சில அரசு அதிகாரிகளின் முஸ்லிம் விரோத போக்கு இவையே அரசு ஒதுக்கும் பலகோடி ரூபாய்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம்.

 முஸ்லிம்கள் இதன்மூலம் விழிப்புணர்வு பெற வேண்டும். முஸ்லிம்களுக்கு உதவ அரசு அமைத்த நிறுவனங்களை தொடர்ந்து அனுகி அங்கு நடக்கும் அவலங்களை பொது மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்!


 தமிழக முஸ்லிம் மாணவர்களின் கல்வி உதவிக்காக கீழ்காணும் நிறுவனங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு நலத் திட்டங்களும் கல்வி உதவியும் வழங்கப்படுகின்றது. முழுவிபரம் அறிய இந்த நிறுவனங்களை அணுகவும்.

µDirectorate of Minorities Welfare  (rpWghd;ikapdu; ey ,af;ffk;) 807, Anna Salai, Chennai-2  Contact: Mr.R.S. Kanna I.A.S. Mrs. S.T. Indra PH: 044-28511124 / 28551442 / 26161464
µTamil Nadu Minorities Economic Development Corporation Ltd., (jkpo;ehL rpWghd;ikapdu; nghUshjhu tsu;r;rp fofk;) 807,  5th Floor, Anna Salai, Chennai -2 Contact: Mr. D. Riswan Ahmad / Mr. Kanna I.A.S. PH: 044-28514846
µMinorities Commission (rpWghd;ikapdu; fkp\d;)
124, Sir Theagaraya Road, Teynampet, Chennai -18 Contact: Mr. Bishap Vincent Cinnadurai (Charman) PH: 044-24349235

 ஒவ்வொரு மாவட்டம் தோறும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் உள்ளனர்.இவர்களை தொடர்பு கொண்டு கல்வி உதவி பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

சென்னை 044-25268322 காஞ்சிபுரம் 04112-237424 திருவள்ளூர் 04116-261600 வேலூர் 0416-253012 திருவண்ணாமலை 04175-232306 விழுப்புரம் 04146-2330654 தஞ்சாவூர் 04142-2330121 ரூ 330122 நாகப்பட்டிணம் 04365-253082 திருவாரூர் 04366-2521002 பட்டுக்கோட்டை 04322-221624 திருச்சி 0431-241503134  பெரம்பலூர் 04328-277923 கரூர் 04324-2344508 மதுரை 0452-2532501 தேனி 04546-274960  திண்டுக்கல் 0451-2460080 இராமநாதபுரம் 04567-230056
விருதுநகர் 04562-2352709 சிவகங்கை 04575-240391 திருநெல்வேலி 0462-2501032 தூத்துக்குடி 0461-2340601 கன்னியாகுமரி 04652-2230090 சேலம் 0427-2451172 நாமக்கல் 04286-2581100 தர்மபுரி 04342-2230561 ஈரோடு 0424-2260207 கோயம்புத்தூர் 0422-2301114 நீலகிரி 0423-2444012 மதுரை 0452-2532074

மத்திய அரசின் கல்வி உதவி அமைப்புகள்! 

 மத்திய அரசில் சிறுபான்மையினர் நலனுக்காக தனியாக அமைச்சகமே இயங்கி வருகின்றது. மேலும் சில அரசு நிறுவனங்களும் இயக்கி வருகின்றன இதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காவும் பல்வேறு நலதிட்டங்களும் நிதிஉதவிகளும் வழங்கிவருகின்றன.  இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம் அல்லது TNTJ மாணவர் அணியை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.இந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை (Scholarship)  பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள

இணையதளம்: http://www.educationsupport.nic.in/ 


 அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள்  மருத்துவம் பொருளாதாரம் புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. 

 இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விக் கடன் கொடுக்கும் வங்கிகள் கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள் வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

µMinistry Of Minority Affairs (GOVERNMENT OF INDIA) 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003 Contact: Shri Virendra Singh (Deputy Secretary) Tel: 011-24364279 (Office)  011-25368963 (Residence) Fax: 011-24364285
µDepartmental Appellate Authority,                    11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003      Tel:011-24364271 (Office) 011-23383576 (Residence)                Fax: 011-24364285 Contact: Shri Sujit Datta  (Joint Secretary)
µNational Commission for Minorities,
5th Floor, Lok Nayak Bhavan, Khan Market, New Delhi-110 003 Tel:011-24618349 Fax: 011-24693302, 24642645, 24698410 Email:ncm-mma@nic.in http://www.ncm.nic.in/

µNational Minorities Development and Financial Corporation, Taimoor Nagar, New Friends Colony, Nehru Nagar, Delhi –110065 (Near S.R.R.I. Staff Quarters) Phone: 011-26326051


முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் நிறுவனங்கள்!


 முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதிஉதவி செய்து வருகின்றன. தமிழக அளவில் கல்வி உதவி திட்டம் என்ற அளவிற்கு எந்த அமைப்பும் செயல்படுத்தவில்லை. சிறிய அளவில் அவர்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் மாணவர்கள் இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தால் நிதி உதவி பெறலாம். மேலும் பல அமைப்புகள் நிதி உதவி செய்கின்றன. இவற்றின் விபரங்களை டி.என்.டி.ஜே மாணவர் அணியை தொடர்பு கொண்டு பெற்றறு கொள்ளலாம்.

µMuslim Educational Institutions And Associations In Tamilnadu (OMEIAT) Anjuman Campus, # 16, B.N. Reddy Road, T. Nagar, Chennai - 17.  Email: omeiat@rediffmail.com
µB.S. Abdur Rahman Zakaat Fund Foundation, Buhari Building, 4,
Moores Road
, Chennai-600 006. Ph: 044-42261100 Fax: 044-28231950 Email: admin@bsazakaat.org, www.bsazakaat.org
µBaitulmal Tamilnadu, New:100 (Old No: 314), Wallajah Mosque Compound, Triplicane, Chennai - 600 005 Phone : 044-2851 2947 / 2841 1145 EMail:contact@baitulmaltamilnadu.org baitulmaltamilnadu@yahoo.com Web: http://www.baitulmaltamilnadu.org/
µIslami Baitulmal.
Hajee Abdul Raheem Sahib Street
, Fort, Vaniyambadi-635751. Contact : Abdullah Basha Ph: 04174-225481 Email: tahmed.iftikhar@gmail.com  www.tahmed.iftikhar@gmail.com
µSeethakathi Trust, 688, Anna Salai,
Greams Road
,  Chennai-6. Phone: 044-28522982 web: http://www.crescentcollege.org/

µFathima Educational Trust, 16/298, LIC Colony, Hotal Vasantham Road, New Bus Stand, Salem-636 004. Phone : 0427 - 4041899, 9865978889, 9360684974 Web: www.fathimaedutrust.org
µMuslim Education Association, New College Compound, 87,
Peters Road
, Royapettah, Chennai-600 014 Ph: 044-28267318
µNoorul Islam Educational Trust, Kumaracoil, Kanyakumari District- 629 180, Web: info@niceindia.com
µSulaiman Alim Charitable Trust, Suite 4, 4th Floor, Jhaver Plaza, 1-A, Nungambakkam High Road, Chennai-600034 Phone: 044-28115935
µThe Children Foundation,  Post Box No-5007, Chennai – 600090 Email: info@childrenfoundation.net  web:www.childrenfoundation.net (Students studying 5th to +2)
µAll India Caravan-E-Insaaf, 21,
R.H. Road, Chennai-14, Mr. Mushtaq Ahmad Mob: 9444052530 web:www.caravan-e-insaaf.com
µSouth Indian Educational Trust
Chennai:  No: 10,T.C.Nagar Virugambakkam, Chennai.      Mobile: 98403 14436 email:sietchn@southindianedu.org
Coimbatore:  No,44, Divine, Ganapathy, Coimbatore
Mobile: 9894619874 email: sietcbe@southindianedu.org

பள்ளிக்கல்வியை முடித்தவர்கள் டி.டி.பி. பயிலலாமே??


 பத்தாம் வகுப்பு தேறியவர்கள் டி.டி.பி. எனும் கம்ப்யூட்டர் பயிற்சியை பயில்வதன் மூலம் நல்ல வேலை வாயப்புக்களைப் பெறலாம்.இந்தப் பயிற்சியை முடித்தவர்களுக்கு பத்திரிகைத்துறை,விளம்பரத்துறை,பதிப்பகத்துறை,அச்சுத் துறை போன்றவைகளில் நல்ல எதிர் காலம் இருக்கிறது.மேலும், இத்துறையை கற்றவர்கள் சுயமாகவும் நிறுவனங்கள் நடத்தலாம். பேஜ்மேக்கர்,கோரல்டிரா மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியன இப்பயிற்சியில் கற்றுத் தரப்படுகின்றன. ஒரளவு டைப்பிங் பயிற்சியோடு டி.டி.பி.யைக் கற்றுக் கொள்ள பின்வரும் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.

 இத்துறையில் வளர்வதற்கு நீங்கள் வேகமாக டைப் செய்திடக் கற்றுக் கொண்டாலே சாதிக்க இயலும்.பிற்பட்டோருக்கான (முஸ்லீம்களுக்கும்தான்) கட்டணச் சலுகையோ அல்லது இலவசமாகவோ(பெற்றோரின் வருமானத்தைப் பொறுத்து) இந்நிறுவனம் வழங்குகிறது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள    

தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல், 42ஃ25, ஜி.ஜி. காம்ப்ளக்ஸ், 2வா மாடி, விஜிபி அருகே, சென்னை – 600002, தொலைபேசி: 28527579, 28414736. செல்: 9840116957.

அன்புடன் வெளியிடுவோர்...  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) – துபை