தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

நெட்டப்பாக்கம் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு – புதுவை TNTJ வின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

புதுவை மாநிலம் , நெட்டப்பாக்கம் பள்ளிவாசலில் ஒலி பெருக்கி மூலம் பாங்கு சொல்லவும், ஜனாஸா தொழுகை நடத்தவும் தொடர்ந்து தடைகளை ஏற்ப்படுத்தும் புதுவை முதல்வர். V வைத்திலிங்கம் அவர்களை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 22.02.2011 செவ்வாய்க்கிழமை (ராஜா தியேட்டர் சிக்னல் அருகில்.)நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைக் குறித்து கடந்த 18.02.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (புதுவை) பாண்டிச்சேரி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைக் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு புதுவை மாநில துணை செயளலர்.பஹாருதீன் விளக்கமளித்தார். புதுவை மாநில தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் நெட்டப்பாக்கம் ஜூம்மா பள்ளிவாசல் நிவகிகளும் உடன் இருந்தனர்
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.