தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

மூடர்களின் கூடாரமா? முஸ்லிம் லீக்...


மீலாது நபி விழா என்ற பெயரில் முஸ்லிம் லீகின் மாநில தலைவர் வடக்குகோட்டையார் அப்துல்லாஹ் என்பவர் நடத்திய கூட்டத்தை மூன் தொலைகாட்சி ஒளிபரப்பியது, அதில் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினார்கள், திருமாவளவன் தன் உரையிலே நபிகள் நாயம் ஓரிறை கொள்கையின் மூலம் மனித சமுதாயத்தை ஒன்றினைதார்கள், மனிதர்களிடைய பாகுபாட்டையும் தீண்டாமையையும் இல்லாமல் ஆக்கி படைப்பினங்களை வணங்காமல் படைத்தவனை மட்டுமே வணங்க சொன்னார்கள், உலகில் தோன்றிய எல்லா தலைவர்களும் தனை தானே இறைவன் என்றும் இறைவனின் மகன் என்றும் கூறிக்கொண்ட வேளையில் நபிகள் நாயகம் மட்டும் நான் இறைவனின் தூதர் என்றும் அவனின் அடிமை என்றும் சொன்னார்கள், தற்பொழுதுள்ள சூழலில் உலகில் அமைதியும் ஒற்றுமையும் மலர ஓரிறை கொள்கையையும் இஸ்லாம் கூறும் மனித நேயத்தையும் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும் அதற்கு தொப்பி அனிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பேசி விட்டு சென்று விட்டார், அவரை தொடர்ந்து தலை நிறைய தலைப்பாகையுடன் பேச வந்த மௌலவி ஒருவர் நபிகளாரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கி.பி. 570 ௦ இல் இருந்து படித்தால் போதாது, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பு உள்ள வரலாற்றையும் சேர்த்து படிக்க வேண்டும் ஏன் என்றால், இந்த உலகத்தையும் மற்ற எல்லா வஸ்துக்களையும் படைப்பதற்கு முன்பே நபியுடைய ஒலியை அல்லா படைத்தது விட்டான் என்று கதை விட ஆரம்பித்தார், அதுமட்டும் அல்ல ஒரு தடவை ரசூருல்லா அவர்கள் ஜிப்ரயில் அவர்களிடம் நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்டார்களாம், அதற்கு ஜிப்ரயில் அவர்கள் சரியாக நினைவில்லை, ஆனல் எழுவதாயிரம் வருடத்திற்கு ஒரு முறை ஒரு நட்சத்திரம் தெரியம் அந்த நட்சத்திரத்தை நான் எழுவதிரெண்டு தடவை பார்த்துள்ளேன் என்று சொன்னார்களாம், அதை கேட்ட நபியவர்கள் அந்த நட்சத்திரம் என் ஒலி தான் என்றார்களாம் (நவுதுபில்லாஹ்), யூத நசாரக்களின் கைக்கூலிகளால் எழுதப்பட்ட கதைகளை ரசூருல்லாவை புகழ்கிறோம் என்ற பெயரில் சொல்லுபவர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும், திருமாவளவன் சொன்னதை போல நபியவர்கள் இந்த மனிதகுலத்திற்கு எத்தனயோ நன்மைகளை வழங்கியுள்ளார்கள் அதை பற்றி பேசுவதுதான் நபிகள் நாயகத்திற்கு உண்மையான புகழை சேர்க்கும், அதை செய்ய உங்களால் முடியாதென்றால் குறைந்த பட்சம் இது போன்ற கதைகளை பொது மேடைகளில் பேசி இஸ்லாத்தை பற்றி பிற மத சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளும் படி செய்யாமலாவது இருங்கள், நீங்கள் பேசியதை திருமாவோ அவரை போன்று இஸ்லாத்தின் மீது நல்ல என்னம் கொண்ட வேறு யாருமோ கேட்டு இருந்தால் தன் என்னத்தை மாற்றிக்கொண்டு இருப்பார்கள், திருமாவளவனுக்கு தெரிந்த இஸ்லாம் முஸ்லிம் லீகிற்கு தெளியவில்லையே என்பது தான் வருத்தமான விஷயம், அல்லா இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
(அபு ஜஸ்ரா)