தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

வாக்காளர் அடையாள அட்டை - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!


வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் இன்றும் நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமில் நகல் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பல்வேறு காரணங்களினால் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்த நபர்களுக்கு அந்த அட்டையின் நகல் பெறுவதற்காக சிறப்பு முகாம் ஒன்று 19-2-2011 மற்றும் 20-2-2011 ஆகிய தேதிகளில் அனைத்து பிர்க்கா தலைமை இடங்களிலும், நகர்ப்புற பகுதியில் மண்டல அலுவலகத்திலும் நடத்தப்பட உள்ளது.

அத்தகைய நபர்கள் படிவம் 001-சி மற்றும் நகல் அட்டைக்கான கட்டணம் ரூ.15 உடன் பிர்க்கா தலைமையிடம் அல்லது மண்டல அலுவலகத்திற்கு வர வேண்டும். மேலும் இவ்வாறான அடையாள அட்டை வேண்டுபவர் சரியான நபர்தானா என்பதை உறுதிப்படுத்த ஏதுவாக அடையாளத்துக்கான சான்று, முகவரிக்கான சான்றுடன் வர வேண்டும்.

இதற்கென நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்களும் கட்டணத்தைத் தொகையாகப்பெற்று ரசீது வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இக்கட்டணத்தை வங்கி செலுத்து சீட்டு மூலமாகவோ அல்லது கருவூலத்தின் மூலமாகவோ செலுத்த தேவையில்லை.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 6-வது படிவத்திலும், பெயரில் மாற்றம் கோருபவர்கள் 8-வது படிவத்திலும், அதே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோருபவர்கள் 8-ஏ படிவத்திலும் தங்கள் விண்ணப்பத்தை மேற்படி முகாமில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து இரு நகல்களில் வருவாய் ஆய்வாளர் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நன்றி:-இந்நேரம்.காம்)