தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

உயிரைப் பறித்த போதைப் பழக்கம்

தன்கண்முன்னால் கணவனோ, மனைவியோ, குழந்தையோ விபத்தில் சிக்கி இறந்தால் அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. விபத்து என்றால்கூட பரவாயில்லை, தற்கொலை என்றால் அது இன்னும் கொடூரம். வாழ்நாள் முழுவதும் ரணமாக கண்முன் தோன்றிக்கொண்டே இருக்கும். திருச்சியில் ஏட்டு ஒருவர் குடிபோதையில் மனைவி, குழந்தைகள் முன்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் ஆதித்யபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜா. திருச்சி மாநகர காவல் ஆயுதப்படையில் ஏட்டு. விஐபிகளுக்கு மெய்க்காவலர் பணி செய்து வந்தார். இதனால் எப்போதும் கையில் பிஸ்டல் இருக்கும். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. பணியை முடித்தபிறகு வீட்டுக்கு சாப்பிட வந்திருக்கிறார். அப்போதே போதையில் இருந்திருக்கிறார். மீண்டும் மாலை வேலைக்கு கிளம்பியபோதும் போதை குறையவில்லை. ‘குடித்துவிட்டு வேலைக்கு போனால் பிரச்சினை வராதா?’ என்று மனைவி கேட்டுள்ளார். ‘குடித்துவிட்டு வந்தால் இனி பேசமாட்டேன்’ என்றும் கூறி உள்ளார். ‘பேசாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று கூறியபடி பிஸ்டலை எடுத்து தனது நெற்றிப்பொட்டில் வைத்துள்ளார். மூத்த மகன் ஓடிவந்து பிஸ்டலை பிடுங்கி பீரோவில் வைத்திருக்கிறார். மீண்டும் அந்த பிஸ்டலை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி இருக்கிறார். மகன் ஓடிவந்து பிஸ்டலை பிடுங்குவதற்குள் அது வெடித்துவிட்டது. ரத்த வெள்ளத்தில் பிணமானார் ஆனந்தராஜா. மனைவி, குழந்தைகள் கண்முன் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் துறையில், பிஸ்டல் போன்ற ஆயுதங்களை கையாள்பவர்கள் குடிபோதையில் இருப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் அவர்கள் உயிருக்கு மட்டுமல்லாமல் அனைவரின் உயிருக்கும் ஆபத்து. போலீசார் அனைவருமே குடிகாரர்கள் அல்ல. எனவே குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு மட்டுமே துப்பாக்கி வைத்திருக்கும் பணி வழங்கப்பட வேண்டும். அதுவும் விஐபிகள் பாதுகாப்பு, ஏர்போர்ட் பாதுகாப்பு போன்ற பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
மனைவியை மிரட்ட பிஸ்டலை எடுத்தவர் போதையில் இல்லாமல் இருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார். இப்படி மனைவி பிள்ளைகளை தவிக்கவிட்டு இறந்திருக்க மாட்டார். தங்கள் கண்முன்னாலேயே அவர் இறந்தது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் காலம் முழுவதும் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டது. போதை உயிரை பறித்துவிட்டது
செய்தி : தமிழ் முரசு 15-02-11